முதல் பக்கம்

Jan 29, 2015

நியூட்ரினோ-பொது வெளி அரங்கு நிகழ்ச்சி


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம் சார்பில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ நோக்குக்கூடம் குறித்த விஞ்ஞான விளக்க கருத்தரங்கம் தேவாரத்தில் ஜனவரி 28 மாலை 5 மணி அளவில் காமராஜர் அரங்கில் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் திருமிகு.சிவாஜி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேரா.முகமது ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட் வரவேற்புரை ஆற்றினார். மா நிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் அறிமுகவுரை ஆற்றினார். மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு நியூட்ரினோ நோக்குக்கூடம் குறித்து விளக்கம் அளித்தார்.தமிழ் நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் திருமிகு ராஜப்பன் விவசாயிகள் சார்பில் பங்கேற்று கேள்விகளை எழுப்பினார்.பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நண்பர்கள் மாற்று அமைப்பினர் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.போடிக்கிளை செயலாளர் திருமிகு,ஸ்ரீதர்,பாளையம் கிளைத்தலைவர் திருமிகு வளையாபதி ஓவியர் பாண்டி,குமரேசன்,ஓவியா தனசேகரன்,கூடலூர் கிளை ராஜ்குமார்,மோகன் உள்ளிட்ட அறிவியல் இயக்க மாவட்ட மற்றும் கிளைப்பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment