முதல் பக்கம்

Nov 10, 2017

கல்லூரியில் கருத்தரங்கு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெரியகுளம் கிளை சார்பாக விஞ்ஞானி மேரி கியூரியின் பிறந்தநாள் கருத்தரங்கம், புனித அன்னாள் பெண்கள் கல்வியியல் கல்லுாரியில் நடந்தது. கிளைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். டிரயம்ப் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராம்சங்கர், ஆசிரியை மணிமேகலை முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்கம் மாநில தலைவர் மோகனா, விஞ்ஞானி மேரி கியூரியின் வாழ்க்கை வரலாறும், அவரது சாதனைகள் குறித்து மாணவிகளிடம் விளக்கினார். மாவட்ட செயலாளர் ஜெகநாதன், மாவட்ட தலைவர் மகேஷ், துணை செயலாளர் ராம்குமார், கல்லுாரி முதல்வர் பியூலா பிரக்ரன்ஸ், பேராசிரியர் போதுராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். அறிவியில் இயக்கம்கிளைச் செயலாளர் ஞானசுந்தரி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment