முதல் பக்கம்

Nov 15, 2017

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நடந்தது.

மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் பாலசுப்ரமணியன், அம்மையப்பன் முன்னிலை வகித்தனர். கிளைச்செயலர் ராம்குமார் வரவேற்றார். மாவட்ட செயலர் ஜெகநாதன், மாநில செயலர் வெண்ணிலா பேசினர். முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, குழந்தை விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேஷ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர் நாராயணசாமி வாழ்த்தினர். பேராசிரியர்கள் செல்வராஜ், கோபி, சேசுராஜ் ஆய்வறிக்கையை மதிப்பிட்டனர். சுந்தர் ஆசிரியர் தினப் போட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

அறிவியல் இயக்க மாவட்ட செயலர் ஜெகநாதன் கூறியதாவது: நிலைத்த மேம்பாட்டிற்கான அறிவியல் தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்புகள் என்ற தலைமைப்பில் மாணவர்கள் 40 ஆய்வறிக்கையை சமர்பித்தனர். 25 பள்ளிகளை சேர்ந்த 200 மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெறுவோர் டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். அங்கு இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment