முதல் பக்கம்

Apr 15, 2012

திறனறிதல் தேர்வு: பரிசளிப்பு விழா-2012


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளையின் சார்பில் கடந்த பிப்ரவரி,25 ஆம் தேதி 6,7,8 மாணவர்களுக்கான அறிவியல் திறனறிதல் போட்டி நடைபெற்றது. அத்தேர்வில் சுமார் 1200 மாணவர்கள் பங்கேற்றனர். சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் 100/100 மதிப்பெண்கள் பெற்றனர். அவர்களுக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா ஏப்ரல், 14,2012 அன்று பெரியகுளம் எட்வர்டு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றுப் பேசினார். சாதனை புரிந்த மாணவர்களுக்கு பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் திரு.ஓ.ராஜா பரிசுகள் வழங்கி பாராட்டினார். வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.ப.ஜிந்தா மதார் மைதீன், எட்வர்டு நடுநிலைப்பள்ளி செயலாளர் திரு.எம்.வி.கிருஷ்ணமூர்த்தி, பெரியகுளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எ.விஜயகுமார், அரிமா.எ.சி.சிவபாலு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர்   ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.மனோகரன் நன்றி கூறினார். கிளைத் துணைத்தலைவர் எஸ்.எ.செல்வராஜ், பொருளாளர் பெ.ஆண்டவர், துணைச்செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் நண்பர்கள் கார்த்திகேயன், ஸ்ரீராம் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர். நகர்மன்ற பிரதிநிதிகள், 43 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 100 ஆசிரியர்கள் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் என மிகத்திரளாகப்  பங்கேற்றனர்.


--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

1 comment: