முதல் பக்கம்

Jul 7, 2012

பெரியகுளத்தில் அறிவியல் திறனறிதல் தேர்வு

பெரியகுளம், ஏப். 19-
 தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் திறனறிதல் தேர்வு 2012 நடத்தப்பட்டது. இந்த தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கிளைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
 மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முத்துச்சாமி, உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் புஷ்பராஜ் சேவியர், அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் ராம்சங்கர் வரவேற்று பேசினார். விழாவில் நூறு மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பெரியகுளம் நகரசபை தலைவர் ராஜா, மாரியப்பன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
விழாவில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜிந்தா மதார்மைதீன், மேற்பார்வை யாளர் விஜயகுமார், கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஸ்ரீதேவி, அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர், ஸ்டேட் வங்கி மேலாளர் வெங்கட்ராமன், டாக்டர் செல்வராஜ், கிளை துணைத் தலைவர் செல்வராஜ், முத்துமணிகண்டன்,
மாங்கனி அரிமா சங்கத் தலைவர் சிவபாலு, ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவினை கார்த்திகேயன், ஆனந்த குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழா முடிவில் கிளை துணை செயலாளர் மனோகரன் நன்றி கூறினார். 
-MALAIMALAR

No comments:

Post a Comment