முதல் பக்கம்

Dec 23, 2013

துளிர் திறனறிதல் தேர்வு-2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் டிசம்பர் 7 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை துளிர் திறனறிதல் தேர்வு-2013 மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 தேர்வு மையங்களில் 410 மாணவர்கள் இத்தேர்வினை எழுதினர்.வினாத்தாள் பிரித்தல் ,அறை கண்காணிப்பளர்கள் நியமித்தல், பள்ளிகளுடன் நல்ல தொடர்பு இருந்தமையால் தேர்வு எவ்வித குழப்பமுமின்றி மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.பெரியகுளம்,கம்பம்,உத்தமபாளையம்,கடமலை-மயிலை ஆகிய ஒன்றியங்களில் தேர்வு நடைப்பெற்றது. மற்ற ஒன்றியங்களில் இத்தேர்வினை அடுத்த ஆண்டு மிகச் சிறப்பாக நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.பெரியகுளம் கிளை தலைவர் திருமிகு.ஏ.எஸ்.பாலசுப்ரமணியன்,கம்பம் கிளை செயலர் க.முத்துக்கண்ணன்,மாநிலச் செயலாளர் தே.சுந்தர்,உத்தமபாளையம் கிளை செயலாளர் திருமிகு.ஜஸ்டின் ரவி,மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,கம்பம் கிளை பொருளாளர் மொ.தனசேகரன்,கம்பம் கிளை நந்தகுமார்,ராஜ்குமார்,அறிவியல் இயக்க ஆர்வலர் சூரியபிரகாஸ்,உத்தமபாளையம் கிளைத்தலைவர் வளையாபதி,பூசணியூத்து பள்ளி ஆங்கில ஆசிரியர் மொக்கராஜ்,கடமலை-மயிலை கிளைச் செயலாளர் திருமிகு.இரத்தினசாமி,கே.எம் பட்டி ஈஸ்வரன் ஆகியோரின் பங்கும் பணியும் போற்றுதலுக்குரியது.

No comments:

Post a Comment