முதல் பக்கம்

Dec 23, 2013

மந்திரமா? த ந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி

மந்திரமா? த ந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி -1
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் (நவம்பர் 13-2013)புதன் கிழமை அன்று போடி ஒன்றியத்திறகு உட்பட்ட செளண்டீஸ்வரி நடு நிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி காலை 11 மணி அளவில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு. சதீஸ் குமார் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கன்னியாகுமரி மாவட்ட கருத்தாளர் திருமிகு.எஸ்.தாமோதரன் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் செயல்பாடுகளை செய்து காட்டினர். 350 க்கும் மேற்பட்ட மானவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.பள்ளி மாணவர் ஜெயராமன் இறுதியில் நன்றி கூறினார்.போடி கிளை செயலாளர் திருமிகு ஸ்ரீதர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி -2
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் (நவம்பர் 13-2013)புதன் கிழமை அன்று போடி ஒன்றியத்திறகு உட்பட்ட போடி அம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி மாலை 3 மணி அளவில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.ஆண்டவன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கன்னியாகுமரி மாவட்ட கருத்தாளர் திருமிகு.எஸ்.தாமோதரன் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் செயல்பாடுகளை செய்து காட்டினர். 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மற்றும் போடி கிளைப் பொருளாளர் திருமிகு.ஜெகதீசன் இறுதியில் நன்றி கூறினார்.போடி கிளை செயலாளர் திருமிகு ஸ்ரீதர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

No comments:

Post a Comment