முதல் பக்கம்

Feb 24, 2014

பிப்ரவரி-28 தேசிய அறிவியல் தினம்-போட்டிகள்

வணக்கம்.. இந்தியர்களின் அறிவியல் சாதனையை இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னரே தனது இராமன் விளைவு எனும் அற்புத கண்டுபிடிப்பின் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறியவர் சர்.சி.வி.இராமன்.1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று வானம்,கடல் ஆகியவை நீல நிறமாக இருப்பதற்கான காரணத்தை தனது இராமன் விளைவு எனும் தத்துவத்தின் மூலம் சி.வி.இராமன் கண்டுபிடித்தார்.அவரது சாதனையை போற்றும் வகையில் பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக நாடு முழுவதும் வெகு சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.அறிவியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் தேசிய அறிவியல் தினத்தை தேனி மாவட்டம் முழுவதும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெகு சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானித்துள்ளது.அதன் ஒரு பகுதியாக பள்ளி.கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய,கட்டுரை போட்டிகளுக்கான தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.வகுப்புகள்,தலைப்புகள் பின்வருமாறு…..

ஓவியம்:  5,6,7,8 ம் வகுப்பு : அறிவியலும் சுற்றுச்சூழலும் : A4 அளவு சார்ட்


கட்டுரை: 9.10,11,12 ம் வகுப்பு : உள்ளூர் வளர்ச்சியில் அறிவியல் : 4 பக்கம் மிகாமல்

கட்டுரை: கல்லூரி :சமூக வளர்ச்சியில் அறிவியலின் பங்கு : 6 பக்கம் மிகாமல்

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:
வருகிற பிப்ரவரி 28(வெள்ளிக்கிழமை) 

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்படும்…..

மாணவர்கள் தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

க.முத்துக்கண்ணன்(தேசிய அறிவியல் தினம்-போட்டிகள்)

வார்டு-20 கதவு எண்-2,வ.உ.சி தெரு,

கூடலூர்.625518.தேனி மாவட்டம்..

அன்புடன் 

வி.வெங்கட்ராமன்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.தேனி மாவட்டம்.

No comments:

Post a Comment