முதல் பக்கம்

Feb 24, 2014

மாவட்டசெயற்குழு கூட்டம்-4

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஜனவரி 12ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.மாவட்டத்தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர் திருமதி ஞானசுந்தரி முன்னிலை வகித்தார்.மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலை அறிக்கை செயற்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.உடனடியாக அனைத்து கிளைகளையும் கூட்டுவது,உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது,தேசிய அறிவியல் தினம்,சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுவது ஆகியவை செயற்குழுவில் விவாதிக்கப்பட்டன.மாநிலச் செயலாளர் திருமிகு.தியாகராஜன் மற்றும் தே.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வதேச படிகவியல் ஆண்டு-2014 குறித்து மாநிலக்கருத்தாளர் முனைவர் தினகரன் கருத்துரை ஆற்றினார்.செயற்குழு உறுப்பினர் ஓவியர் பாண்டி மாகடிகாரம் எனும் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.20 க்கும் மேற்பட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment