முதல் பக்கம்

Feb 28, 2015

கம்பத்தில் தேசிய அறிவியல் தினவிழா…

உலகப்புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் தன்னுடைய புகழ்பெற்ற இராமன் விளைவை 1928 ஆம் வருடம் பிப்ரவரி 28 ஆம் நாள் உலகிற்கு நிருபித்தார்.அவரது சாதனையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் தேசிய அறிவியல் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டத்தின் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் பிப்ரவரி27,வெள்ளிக்கிழமை அன்று கம்பம் நகராட்சி மெயின் ஆரம்பப்பள்ளியில் நடைப்பெற்றது.கல்வி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 200 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.துவக்கநிலை, நடுநிலை,உயர்நிலை என மூன்று பிரிவுகளில் மாணவ-மாணவியர் பல்வேறு அறிவியல் தலைப்புகளில் பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகளில் பங்கேற்றனர். 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹா.ஸ்ரீராமன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டசெயற்குழு உறுப்பினர் க.பாண்டி வரவேற்புரை ஆற்றினார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன் மற்றும் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.குழந்தைகளுக்கான மந்திரமா? தந்திரமா? மேஜிக் நிகழ்ச்சியினை ஆசிரியர் ராஜ்குமார் செய்து காட்டினார்.கம்பம் கிளைப் பொருளாளர் மொ.தனசேகரன் நன்றியுரை வழங்கினார்.அறிவியல் தின விழாவை ஆசிரியர்கள் சுரேஸ்கண்ணன்,நந்தகுமார்,செல்லப்பாண்டி மற்றும் சோமநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 
போட்டிகளில் வெற்றி பெற்றோர் விவரம் பின்வருமாறு:
பேச்சுப்போட்டி:  துவக்கநிலை(4,5 ஆம் வகுப்பு):

முதலிடம்: எஸ்.இன்சமாம் உல் ஹக் (என்.எஸ்.கே.பி.காமட்சியம்மாள் துவக்கப்பள்ளி,கூடலூர்)
இரண்டாமிடம்: அ.ஆப்ரினா பாத்திமா (ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி,கம்பம்)
மூன்றாமிடம்:சி.ஜனனி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.கீழக்கூடலூர்)


நடுநிலை(6,7,8 ஆம் வகுப்பு):
முதலிடம்:என்.பவித்ரா (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.சுருளிப்பட்டி)
இரண்டாமிடம்:தா.கோகிலா (ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி,கம்பம்)
மூன்றாமிடம்:ரா.இலக்கியா (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. கீழக்கூடலூர்)

உயர்நிலை(9,10 ஆம் வகுப்பு):
முதலிடம்: இ.ஜனத்துல் பிர்தொளஸ்(நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி.கம்பம்)
இரண்டாமிடம்:கே.சுகைனா(நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி.கம்பம்)
மூன்றாமிடம்:எஸ்.அனவர் அப்சல்(இலாஹி உயர்நிலைப்பள்ளி,கம்பம்)

ஓவியப்போட்டி:  துவக்கநிலை(4,5 ஆம் வகுப்பு):
முதலிடம்: க.ரம்யா(அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி,கே.எம் பட்டி)
இரண்டாமிடம்:டி.தனலட்சுமி((ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி,கம்பம்)
மூன்றாமிடம்:அ. நித்தீஸ் குமார் (திருவள்ளூவர் துவக்கப்பள்ளி.கூடலூர்)

 நடுநிலை(6,7,8 ஆம் வகுப்பு):
முதலிடம்: ஜி.ஹரிகர சுதன்( ஸ்ரீ முத்தையா பிள்ளை உயர்நிலைப்பள்ளி,கம்பம்)
இரண்டாமிடம்: எம்.வினோஸ் ( நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி,கம்பம்)
மூன்றாமிடம்: எஸ். நாகராஜா (ஸ்ரீ முத்தையாபிள்ளை உயர்நிலைப்பள்ளி ,கம்பம்)


உயர்நிலை(9,10 ஆம் வகுப்பு):
முதலிடம்:எம்.அஜய் (நாலந்தா மெட்ரிக் பள்ளி.கம்பம்)
இரண்டாமிடம்:ஜெ.விஷ்னு(((ஸ்ரீ முத்தையாபிள்ளை உயர்நிலைப்பள்ளி, கம்பம்)
மூன்றாமிடம்:ஹ.அப்துல் மனாப் (இலாஹி உயர்நிலைப்பள்ளி,கம்பம்.



தொடர்புக்கு:வி.வெங்கட்ராமன் மாவட்டச் செயலாளர் 9488683929

2 comments: