முதல் பக்கம்

Aug 7, 2015

கம்பம் ஒன்றிய அளவில் துளிர் அறிவியல் வினாடி வினா-2015

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் இன்று ஆகஸ்ட் 7 வெள்ளி அன்று துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான துளிர் அறிவியல் வினாடி வினாப் போட்டி கம்பம் நகராட்சி மெயின் ஆரம்பப்பள்ளியில் நடைப்பெற்றது. இரண்டு பிரிவுகளில் இருபதுக்கும் மேற்பட்ட குழுக்கள் சார்பாக அறுபது மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் பங்கேற்றனர்.அறிவியல்,தமிழ் மற்றும் பொதுஅறிவு ஆகிய சுற்றுகளின் கீழ் வினாக்கள் கேட்கப்பட்டன.மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற பள்ளிகள்: துவக்க நிலை(ஐந்தாம் வகுப்பு)

முதலிடம்: அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி சுருளிப்பட்டி
இரண்டாமிடம்:கஸ்தூரிபாய் நடுநிலைப்பள்ளி-கே.கே.பட்டி
மூன்றாமிடம்: அரசு ஆரம்பப்பள்ளி-லோயர்கேம்ப


நடுநிலை(6,7,8 வகுப்பு)
முதலிடம்: அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளி- கம்பம்
இரண்டாமிடம்:இலாஹி ஓரியண்டல் அரபி உயர்நிலைப்பள்ளி-கம்பம்
மூன்றாமிடம்: ஸ்ரீ எம்.பி.எம்.உயர்நிலைப்பள்ளி-கம்பம்


பரிசளிப்பு விழா

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கம்பம் கிளைத்தலைவர் ஜி.பாண்டி தலைமை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மலர்விழி முன்னிலை வகித்தனர்.கம்பம் கிளை இணைச்செயலாளர் எஸ்.சுரேஷ் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலச்செயலாளர் தே.சுந்தர் துவக்கவுரை ஆற்றினார்.மருத்துவர் ஆர்.இன்பசேகரன் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ்.காளிதாஸ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.கம்பம் கிளை துணைத்தலைவர் அ.பெரோஸ் மற்றும் பாளையம் கிளைத்தலைவர் எ.வளையாபதி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட செயலாளர் வி.வெங்கட் வாழ்த்திப் பேசினார்.கம்பம் கிளைப் பொருளாளர் மொ.தனசேகரன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் இயக்க ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



மேலும் தொடர்புக்கு: வி.வெங்கட் மாவட்ட செயலர்.9488683929

No comments:

Post a Comment