முதல் பக்கம்

Aug 15, 2015

ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின போட்டிகள்

கூடலூர், :ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியலை ஆக்கத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், உலக ஒற்றுமைக்காகவும் மட்டுமே பயன்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: "அணுயுத்தத்தால் அகதிகளாய் குழந்தைகள்' என்ற தலைப்பில் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. "அணு ஆயுத குவிப்பால் அமைதி கிட்டுமா' என்ற தலைப்பில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, "அணு ஆயுத போருக்கு அசோகர் சாட்சியானால்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப்போட்டி நடைபெறும். சுயஉதவிக்குழு மற்றும் ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்காக "அணு ஆயுத போட்டியும் அன்றாட உணவுக்கான போராட்டமும்' என்ற தலைப்பில் கதைப்போட்டியும் நடைபெறும். படைப்புகளை ஆகஸ்ட் 22 க்குள் அனுப்பவேண்டும். சிறந்த படைப்புகளுக்கு பரிசும் கலந்து கொள்ளும் அனைத்து படைப்புகளுக்கும் பாராட்டு சான்றும் வழங்கப்படும். படைப்புகளை வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சவுடம்மன் கோயில் தெரு, கூடலூர், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பலாம். விபரங்களுக்கு 94886 83929 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment