முதல் பக்கம்

Aug 3, 2015

போடி ஒன்றியக்கிளையின் நான்காவது மாநாடு

போடி ஒன்றியக்கிளையின் நான்காவது மாநாடு ஜூலை 30 2015 வியாழக்கிழமை அன்று மாலை மாலை 5 மணி அளவில் போடி மூட்டா அரங்கில் நடைப்பெற்றது. போடி கிளைத்தலைவர் ஆர்.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்.செ.சிவாஜி மற்றும் முனைவர் சி. கோபி முன்னிலை வகித்தனர். போடி கிளைச்செயலாளர் ப.ஸ்ரீதர் வரவேற்புரை ஆற்றி கிளையின் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைப்பெற்றது. புதிய தலைவராக தலைமை ஆசிரியர் குமரேசன் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார். கிளைச்செயலாளராக ப.ஸ்ரீதர் ,பொருளாளராக பொ.ஜெகதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளையின் இணைச்செயலாளர்களாக பாலமுருகன் மற்றும் கிளைத் துணைத்தலைவர்களாக முனைவர் சி.கோபி மற்றும் ஆசிரியை ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பதினெட்டு பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் மற்றும் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் எஸ்.தினகரன் சக்கை உணவுகளும் அதன் கார்ப்பரேட் அரசியலும் அனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.தேனி கிளைச் செயலர் மு.தெய்வேந்திரன் காளிதாஸ்,தலைமை ஆசிரியர் பழனிராஜா,கமல் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment