முதல் பக்கம்

Mar 15, 2020

கொரோனோ தொற்று நோய் : மக்கள் சாசன அறிக்கை -- JSA & AIPSN



கொரோனோ தொற்று நோய் அறிக்கை - மக்கள் சாசனம்: மக்கள் ஆரோக்கிய இயக்கம் ( JSA) மற்றும் அனைத்திந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு (AIPSN) சார்பாக வெளியிடப்பட்டது..

இப்போதே செயல்பட்டு, உயிர்களைக் காக்கவும் பொது சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் அரசைக் கோருதல்.

ஜனவரி,30 அன்று Covid- 19 ன் முதல் பாதிப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து மார்ச்,15 வரை இந்தியாவில் 107 பேர் பாதிக்கப்பட்டு அதில் இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசு இதில் சர்வதேச பயணங்களைக் கட்டுப்படுத்தியும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களையும் அவர்களின் தொடர்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட அறிகுறிகள் தென்பட்டால்  அவர்களை தனிமையில் வைத்தும் அறிகுறிகள் தென்படாவிட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தியும் துரிதமாக செயல்படுத்தியுள்ளது. இது  நோயின் பரவலை தாமதப்படுத்துவதற்கு உதவியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசுக்கு தெரியும்.. இன்னும் பெரிய அபாயம் வர இருக்கிறது என்று...

இந்த உடனடியான, வழக்கமான நடவடிக்கைகளான நோயாளிகளை தனிமைப்படுத்துதல், தனியாக வைத்தல் மற்றும் சமூக விலகல்களை செயல்படுத்த தீவிரப் பிரச்சாரம் ஆகியவற்றை வரவேற்கும் அதே வேளையில் இந்த நோய் சமூக அளவில் பரவினாலோ அல்லது இந்த நோய்த் தொற்று உச்சத்தை அடைந்தாலோ, இந்தப் பணிகள்  போதுமானதாக இருக்காது. இந்த நாடு, பொது சுகாதார சேவைகளை பெரிய அளவில் புறக்கணித்ததாலும் , பொது சுகாதாரத்தைத் தனியார் மயமாக்கியதாலும் இது மாதிரியான நோய்களால் எளிதில் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக போராடிக்கொண்டு இருப்பதாலும் கடந்த பத்தாண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார மற்றும் சமூக கொள்கைகள் காரணமாக விளிம்பிற்கு தள்ளப்பட்டு இருப்பதாலும் நாடு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சூழ்நிலையில் இருக்கிறது. 

இது மாதிரியான சமூக மற்றும் பொருளாதார சூழலில் அரசு கீழ்க்கண்ட எங்களது அனைத்து கோரிக்கைகளின் சாசனத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Covid -19 _  கரோனா தொற்று நோயின் முக்கிய அம்சங்கள்..

Covid-19 என்பது உலகம் முழுவதும் பரவி வருகிற கரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட வகையால் ஏற்படும் நோயின் பெயராகும். இதன் அறிகுறிகள், பருவகால ப்ளூ, இதற்கு  முன்னால் வந்த ஃப்ளூ காய்ச்சல்  ஆகியவற்றோடு குறிப்பிடும் வகையில் ஒத்துப்போகிறது. ஆனால் இதன் இறப்பு விகிதம் பருவகால ப்ளூவை விட அதிகமாகவும் மற்ற ப்ளூ மற்றும் கரோனா தொற்று ஆகியவற்றை விட குறைவாகவும் இருக்கும். எண்பத்தொரு சதவீதத்தினருக்கு நோய் பாதித்த  அறிகுறிகள் மிகக்குறைந்த அளவே தென்படும்.

15 சதவீதம் பேருக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும் அளவிற்கு தீவிர அறிகுறிகள் தென்படும். நான்கு சதவீதம் பேருக்கு தீவிர கவனிப்பு மற்றும் சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் இது வயது குறைய குறைய குறைந்து கொண்டு வரும். குழந்தைகளை ஒப்பீட்டளிவில் அதிகம் பாதிக்காது.

1918 இல் வந்த ப்ளூ தொற்றுநோய் தாக்கியதை போல ஒரு சூழ்நிலை தற்போது உள்ள சுகாதார வசதிகளின் காரணமாக ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், அது ஏற்பட முடியாதது அல்ல. அடுத்த சில மாதங்களுக்குள் இதற்கேற்ற மருந்தோ அல்லது தடுப்பு மருந்தோ கிடைக்க வாய்ப்பில்லை. ஆகையால், காலம் காலமாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளான தனிமைப்படுத்துதல், தனியாக வைத்தல் மற்றும் சமூக விலகல் ஆகியவற்றை சார்ந்து இருப்பது தொடரும்.

இந்த நோயின் சமூக பரவல் உறுதி செய்யப்பட்டு விட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவு அதிகமாகும். அதிலும் அறிகுறி தென்படாத நோய் பரப்புபவர்கள் அதிகமாக இருந்தால் இன்னும் அதிகமாகும் அல்லது மக்கள் தொகையில் மிக அதிகம் பேர் பாதிக்கப்படுவார்கள். இந்த நோய் நாட்டின் தற்போதைய பெரியவர்களின் மக்கள் தொகையில் முப்பதிலிருந்து ஐம்பது சதவிகிதம் பேரை பாதிக்கும். மிகக் குறைந்த அளவு இறப்பு விகிதம் ஆக 1 % முதல் தீவிர கவனிப்பு தேவைப்படும் 4% வரை வைத்துக் கொண்டாலும், பலவீனமான இந்த பொது சுகாதார முறைமையால் கவனிக்க முடியாத அளவிற்கு அதிகமாகி, வரும் ஆண்டுகளில் பல மில்லியன் இறப்புகளுக்கு இட்டுச் செல்லும்.

இந்த வைரஸை ஆய்வு செய்து கண்டுபிடிக்க அதிக வசதிகள் இல்லாத காரணத்தால் தற்போது சமூகப் பரவல் ஏற்பட்டிருக்கிறதா அல்லது உண்மையிலேயே எவ்வளவு தூரம் இந்த நோய் பரவி இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அம்மாதிரியான பரிசோதனைகள் செய்ய இயலாத போது திட்டுத் திட்டாக பல இடங்களில் நோய் பரவி , கண்டுபிடிப்பதற்கு முன்பாக அபாய அளவை எட்டும்.

ஆனால் விலக்கி வைத்தல் என்ற பெயரில் , நோய் பரவலை தடுப்பது மற்றும் உயிர் இழப்புகளைத் தடுப்பது ஆகிய பொறுப்புகளை மக்கள் மீது, அதிலும் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாக கூடிய சாதாரண மக்கள் மீது சுமத்துவது கவலை அளிக்கிறது. நோய் பரவலை தடுப்பதில் தற்போதைய நடைமுறையான பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்பது தொடர முடியாதது மற்றும் தற்காலிகமாக நன்மை தரக் கூடியதாகும். இந்த நோய் பரவலின் உச்சம் பல மாதங்களுக்குப் பின்னர் வரும், இப்போது அல்ல. இந்த தாமதம் அல்லது நோய் பரவல் நேராக்குவதுஅரசாங்க மருத்துவமனைகளுக்கு பணிகளை முடுக்கி விட நேரம் கிடைக்கும் என்பதால் பயனுள்ளது. ஆனால் மருத்துவமனைகளை தயார் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாமலோ அல்லது பரிசோதனை கூடங்களை விரிவு படுத்தாமலோ இருந்தால் இந்த தாமதம் பெரும்பான்மையான மக்களை நீண்டகால பொருளாதார மற்றும் சமூக பாதிப்புக்கு உள்ளாக்கி ஆரோக்கிய நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்படுமே தவிர தீர்க்கப்படாது.

சமூகத்தில் உள்ள மக்கள் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை என்னவென்றால், அவர்களுடைய சுகாதாரம் தொடர்பான பழக்க வழக்கங்களில் வேகமான முன்னேற்றங்களை கொண்டுவருவது ஆகும். இந்த நோய் பரவலால் அரோக்கிய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமூகம் ஒற்றுமையும் ஆதரவையும் தெரிவிக்க வேண்டும். இந்தத் தடுப்பு நடவடிக்கைகளால் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் ஏற்படும் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க மத்திய  மற்றும் மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.


கொரோனா தொற்று நோய்
மக்கள்  கோரிக்கைச் சாசனம்...
(மக்கள் ஆரோக்கிய இயக்கம் (JSA)மற்றும் அனைத்திந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு(AIPSN) சார்பாக வெளியிடப்பட்டது )
உயிர்களைக் காப்பாற்றுங்கள்...
வாழ்வாதாரங்களைக் பாதுகாத்திடுங்கள்...
மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்....
மேலே விவாதிக்கப்பட்ட புரிதலின் அடிப்படையில் (மற்றும் COVID-19 தொற்றுநோய் குறித்த பின்னணி ஆய்வறிக்கையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளபடி ), மக்கள் அறிவியல் இயக்கங்களும் மக்கள் ஆரோக்கிய இயக்கமும் அதன் புரிதலையும் அதன் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தும் பின்வரும் மக்கள் கோரிக்கை சாசனத்தை ஏற்றுக்கொள்கின்றன..

சுகாதாரப் பராமரிப்பு  தொடர்புடையது..
1. பொது மருத்துவமனைகளை வலுப்படுத்துவதன் மூலம் சுகாதார மற்றும் மருத்துவமனையில் தேவைப்படும் நோயாளிகளின் அதிகரிப்புக்கு தக்கவாறு அரசு பொது சுகாதார சேவைகளை விரைவாக தயார்படுத்த  வேண்டும். இதற்கு குறைந்தபட்சம், ஒவ்வொரு ஐந்து முதல் பத்து லட்சம் மக்கள்தொகையிலும் அவசர சிகிச்சைப் பிரிவு; சாத்தியமான தனிமை வார்டுகள் மற்றும் வென்டிலேட்டர்கள்; ஆக்ஸிஜன் வழங்கல் கொண்ட ஒரு மருத்துவமனை தேவை.

தொடர்புடைய சுகாதார  நுகர் பொருட்களின்  விநியோகத்திலும் மனித வளத்தைப் பயன்படுத்துவதிலும்  முன்னேற்றம் இதற்குத் தேவைப்படும். எப்படியிருந்தாலும் , அத்தகைய விரிவாக்கம்,  நீண்ட காலமாக  தயார்படுத்தாது தாமதமானது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். மேலும் , இந்த தொற்றுநோய் அத்தகைய தயாரிப்புகளை விரைவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகக் கொள்ளலாம்.

2. நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்தத் தொற்றுநோய் ஒரு முழுமையாக உருவெடுத்த  அவசரநிலையாக மாறினால், தற்போதுள்ள அனைத்து மருத்துவ வசதிகளும், அனைத்து தனியார் மருத்துவமனைகள் உட்பட,  ஒரு மையப்படுத்தப்பட்ட மாவட்ட அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம். சந்தை வழிமுறைகளால் அல்லாமல், மருத்துவ வசதிகளை பிரித்தளிப்பது , இந்த  மாவட்ட அதிகாரத்தால் மட்டும்  செயல் படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதற்குத் தேவையான நெறிமுறைகளும் நிர்வாகமும்  நிதி சார்ந்த நடவடிக்கைகளும்  தொற்றுநோய்க்கான  தயார்நிலையின் ஒரு பகுதியாக கொள்ள வேண்டும்.

3. நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துவதும் , எங்கிருந்து நோய் தொற்றியதெனக் கண்டறிவதும், பெரும் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து திரும்பும் நபர்களை விலக்கி வைப்பதும் நீண்ட காலத்திற்கு தொடர்வது தேவை. சமூக ஊடுறுவலைத் தடுக்க இந்த ஏற்பாடு அவசியம். மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நோய் அறிகுறிகளைக் கொண்ட ஒவ்வொரு நோயாளிக்கும், தேவையான பரிசோதனை வழங்கப்பட வேண்டும் .

4. இந்த நோயை பரிசோதிக்கும் திறனை அதிகரிப்பதன் மூலமும்  அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலிருந்து  அனைத்து பருவகால காய்ச்சல் மற்றும் காய்ச்சல் தொடர்பான பிற மரணங்கள் குறித்து தகவல் சேகரிப்பதின் மூலமும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தினை (Integrated Disease Surveillance Programme) உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும்.

இத்தகைய விரிவாக்கம் இல்லையென்றால் , நாடு இத்தகைய தொற்றுநோயால்  கடப்பதைக் கூட அறியாமலோ அல்லது எதிர்பாராத இடங்களில் கூட மையப்பட்டு நோய் பரவல் ஆச்சரியப்படும் வகையில் வெடிக்கக் கூடும் என எச்சரிக்கிறோம்.

5.   ஒரு நீண்ட கால நடவடிக்கையாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் கட்டுப்பாட்டுக்கான  அரசு மையம் ( Government Centre for Disease Control) ஒன்றினை நிறுவுவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இது தற்போதைய சார்-கோவ் 2 தொற்றுநோய் போன்ற நோய்க்கிருமி தாக்குதல்களுக்கு சோதனை செய்யவும் அடையாளம் காணவும் எச்சரிக்கை தரவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவக்கவும் உதவிடும்..

6. சுகாதார மற்றும் பிற உதவி ஊழியர்களுக்குப் பாதுகாப்பான பணி நிலைமைகள் மற்றும்  போதுமான பாதுகாப்பு உபகரணங்களை உறுதி செய்யப்பட வேண்டும். இவை, மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், வீடுகளில் தனிமைப்படுத்துதலிலும் விலக்கி வைப்பதிலிலும் ஈடுபட்டிருக்கும் முன்னணி தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதற்கு முன்னிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தரமான முகமூடிகள் மற்றும் கிருமி நாசினி திரவங்கள் போன்ற மருத்துவ கருவிகள் அளிக்கப்பட வேண்டும்.

7. பரவலான நோய் பரவல் ஏற்பட்டால் , தேவையான   பொருட்களுக்கான பற்றாக்குறைகளை சமாளிக்க ,வெளிச் சந்தையில்  அதிக விலைக்கு விற்பனைபவர்களிடம் விட்டு விடாமல் பொது சுகாதாரத் தேவைகளின் தெளிவான மதிப்பீட்டால் நிர்வகிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.   2009 இல் H1N1 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்களின் போது இந்த பிரச்சனை வெளிப்பட்டது. மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் வளர்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். மேலும், காப்புரிமை ஏகபோக வாதிகள்  அவசியமான சிகிச்சையின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதைக் கவனமாக தடுக்க வேண்டும்.

சமூக விலகல்  மற்றும் மனித உரிமைகள்..

8. சமூக விலகல் என்பது பொது மக்களுக்கான  விழிப்புணர்வு  மற்றும் ஏற்றுக்கொள்ள வைப்பதால்  செயல்படுத்தப் பட வேண்டும். கட்டாய நடவடிக்கைகள் நியாயமற்றது , உதவாது. சமூகம், மதம், விளையாட்டு தொடர்பான, கலாச்சாரம் அல்லது அரசியல் வெகுஜன கூட்டங்கள், பொது நிகழ்வுகள் இன்னும் சில காலம் நிறுத்தலாம் - ஆனால் தடை செய்யக்கூடாது.

9. வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கும் அத்தியாவசிய சேவைகள் மூடுதலாலோ சேவைகள் கிடைப்பதில் உள்ள பிரச்சனைகள் காரணமாகவோ சமூக பாதுகாப்பு சலுகைகள் குறைக்கப்படுவோருக்கான சமூக ஆதரவு மற்றும் மேம்பாட்டு சேவைகளை உருவாக்குதல்  வேண்டும்.

வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்களில் பலருக்கு பிற நோய்களும் இருக்கலாம். அவற்றிக்கு தொடர்  மருந்துவ சேவைகள் மருந்துகள் தேவைப்படும். பல குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்து திட்டங்கள்  தேவைப்படும். குறிப்பாக அவர்களின் பெற்றோர்களின் வாழ்வாதாரம்  தடைபடும்போது மாற்று வழிகளை உருவாக்காமல் அத்தகைய சேவைகளை நிறுத்துவது நியாயமற்றது.

10. மக்கள்தொகை முடக்கப்படுதல் அல்லது தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்படும் போது, இது ஒரு மனிதாபிமான முறையில் செய்யப்படுவதையும், முக்கிய மனித உரிமைகளை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய சிறப்பு நடவடிக்கைகள் வேண்டும்.

அரசுகளின், மிகவும் நல்ல நோக்கத்துடன் கூடிய நடவடிக்கைகளுக்கும் மனித உரிமைகள் நிறுவனங்கள்சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் தீவிரமான ஈடுபாடு தேவை. இந்தப் பிரச்சனைகளும் வழக்குகளுக்கு உட்பட்டதுதான் என்பதாக, மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.

11. தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகள் குறித்து அறிக்கைகள் வெளியிட ஊடகங்களின் சுதந்திரம் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், நோய்த்தொற்றின் பரவலின் தன்மை, ஆதாரம் மற்றும் சிகிச்சையின் அடிப்படை செய்திகளை வெளியிடும்போது அரசாங்க சேனல்கள், சர்வதேச சுகாதார நிறுவன சேனல்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை செய்தி ஊடகங்கள்  கடைபிடிக்க வேண்டும். இந்த ஆதாரங்களுக்கு வெளியில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு வெளியிடும் போது, இது சரிபார்க்கப்படாதது . தவறானதாகவும் இருக்கலாம் என்ற மறுப்புடன்(disclaimer) இருக்க வேண்டும். ஊடக சுதந்திரங்களுக்கு எந்தவொரு ஒட்டு மொத்த தடையும் தேவையற்றது, எதிர்க்க வேண்டியது.

பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைத்தல் - காரணம் மற்றும் விளைவு..

12. வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளை பராமரித்தல் என்பது முதன்மையாக பெரும்பாலோரின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதாகும். பொது சுகாதார முன்னுரிமையாகவும்   ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இது போன்ற காலங்களில், பொது மக்களின் விழிப்புணர்வு மூலம் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். சம்பளப் பிரிவு மற்றும் வசதி படைத்தவர்களை விட, உழைப்பாளர்களின்  ஏழைகளின் வாழ்வாதாரம் சீர்குலைப்பதால் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்- இதை புரிந்து கொள்ள வேண்டும். வீட்டு தனிமைப்படுத்தப் படுவதாலும்இத்தகைய அடைபடுதலுக்கு ஆட்படுதலாலும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவர்களுக்கு சமூக ஆதரவும் முதலாளிகளிடமிருந்து  ஆதரவும்  இருக்க  வேண்டும்.

13. பொதுச் செலவினங்களில் உடனடியாக  அதிகரிப்பு இருக்க வேண்டும், இது கூடுதலான  பொது வேலைவாய்ப்புக்கும் சமூக பாதுகாப்புக்கும் ஆதரவளிக்கும். இரண்டின் வடிவத்தில் பரவலான கேட்புப் பக்க ஆதரவுக்கு வழிவகுக்கிறது, இது உலகளாவிய அடிப்படை வருமானத்தை உறுதி செய்கிறது.
பெரும்பான்மையினரின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதலை நிவர்த்தி செய்ய இது அவசரமாக தேவைப்படுகிறது, இது ஏற்கனவே ஒரு பத்தாண்டு கால பொருளாதாரக் கொள்கைகளால் சமரசம் செய்யப்பட்டு மூலதனக் குவிப்பை தீவிரப்படுத்தி வாழ்வாதாரங்களை அழித்தது. கார்ப்பரேட  தொழிற்துறையினருக்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான கூடுதல் சலுகைகள், எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் . நியாயமற்றதும் கூட.

No comments:

Post a Comment