முதல் பக்கம்

Oct 6, 2012

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்,அக்டோபர்,5,2012

வணக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை (DST, Govt. of India), தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC-Network, New Delhi) ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) கடந்த 19 ஆண்டுகளாக குழந்தை விஞ்ஞானியர் விருதிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்:

இம்மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் அக்டோபர் 5,2012 (வெள்ளிக்கிழமை) அன்று உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

காலை 10 மணியளவில் துவங்கிய பயிற்சி முகாமிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் எம்.எஸ்.எஸ்.காந்தவாசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் முதல்வர் பி.விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.எஸ்.தினகரன் மாநாட்டின் மையநோக்கம் குறித்துப் பேசி துவக்கிவைத்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆற்றல் துறைத்தலைவர் முனைவர்.சி.இ.சூர்யமூர்த்தி(ஓய்வு) ஆற்றலின் இன்றைய தேவை மற்றும் வருங்காலத்திற்கான மாற்றுத்திட்டங்கள் குறித்து பேசினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறைத் தலைவர் முனைவர்.எஸ்.கண்ணன் ஆய்வு மேற்கொள்ளும் வழிமுறைகள் மாநாட்டின் விதிமுறைகள் குறித்தும் பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் மாநாட்டின் மையக்கருத்தான ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் (ENERGY: EXPLORE ,HARNESS & CONSERVE) குறித்தும் துணைத்தலைப்புகளான ஆற்றல் வளங்கள், ஆற்றல் அமைப்புகள், ஆற்றலும் சமூகமும், ஆற்றலும் சுற்றுச்சூழலும், ஆற்றல் மேலாண்மை மற்றும் சேமிப்பு, ஆற்றல் திட்டமிடலும் மாதிரிகளும் ஆகியவை குறித்தும் அதன்கீழ் மேற்கொள்ளக்கூடிய மாதிரி ஆய்வுத்தலைப்புகள் குறித்தும் பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் நன்றி கூறினார். கல்வி மாவட்டம் முழுவதும் 40 பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான மாவட்ட அளவிலான் குழந்தைகள் அறிவியல் மாநாடு நவம்பர்,4ஆம் தேதி நடைபெறும். பயிற்சி மாலை 4.30க்கு நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment