முதல் பக்கம்

Oct 2, 2012

வாத்தியார்கள் சரியில்லை..

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முப்பருவ கல்வி முறை குறித்த கலந்தாய்வு தேனி மாவட்டம் கம்பம் கிளையில் உள்ள ஆசிரியர் இணையத்தால் நடத்தப்பட்டது. சுமார் இருபது பேர் கலந்துகொண்டனர். இதில் ஆசிரியர் சங்கங்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட சிறிய குழுவாக விவாத்தை எடுத்துச் சென்றன. இவ்விவாதம் எவ்வளவு முக்கியம் என்பதை அங்கே பங்கேற்ற எனக்கு உணர்த்தியது. 
காரணம் இன்றைக்கு அரசு எதையும் யோசிக்காமல் அடுத்தடுத்து கல்வியில் மாற்றத்தை கொண்டுவந்துகொண்டே இருக்கிறது. இன்றைக்கு இருக்கிற திட்டம் நாளைக்கு இருக்குமா? என்ற கேள்வியோடையே ஆசிரியர்கள் இருப்பதால் ரிக்காடிக்கலாக வேலைசெய்தால் போதும் என்ற நிலையில் இருப்பதை நாம் பாக்க முடிகிறது. எதற்கெடுத்தாலும் வாத்தியார்கள் சரியில்லை என்பதையே காரணம் காட்டி இந்த அரசு பள்ளிகளை மூடுவதற்கான வேலைகளை செய்ய துடிக்கிறது. 
ஆசிரியர்கள் பேசும் போது ஏ.பி.எலை கொண்டு வந்து அதை நாங்கள் புரிந்து கொண்டு வேலை செய்ய தயாராக இருந்தபோது இப்போது புத்தகத்தை கொடுத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது. அந்த முறையில் மாணவன் எப்போது அந்த அடைவுகளை முடிக்கின்றானோ அதன்பிறகு அடுத்த நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் இதி்ல் காலாண்டுக்குள் அவன் முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. இது எப்படி பொருந்தும்.

இது பொன்ற பல கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. இது போன்ற சிறிய கூட்டங்கள் ஆங்காங்கே ஆசிரியர்கள் மத்தியில் நடந்தால் கல்வியில் நாம் சரியான வழியை கண்டறிந்து அடுத்த தலைமுறையை அதன் வழியில் நடத்த நம்மால் முடியும்.
மொ.பாண்டியராஜன், மதுரை


No comments:

Post a Comment