முதல் பக்கம்

Oct 23, 2012

மின்வெட்டும் டெங்கி காய்ச்சலும்

ஆசிய புலிக்கொசு (ஏடிஸ் அல்போபிக்டஸ்), மற்றும் ஏடிஸ் இஜிப்திஐ என்ற என்ற இரண்டு கொசு வகைகள் தான் டெங்கி (டெங்கு அல்ல) காய்ச்சலுக்கு காரணமானவை. இவை நல்ல தண்ணீரில் தான் இனப்பெருக்கம் செய்யும். பெரும்பாலும் இவை பகலில் தான் மனிதர்களை கடிக்கும். இந்த கொசுக்கள் தான் டெங்கி வைரசுகளை மனிதனுக்குள் ரத்தத்தின் மூலமாக செலுத்தி டெங்கி காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. நான்கு விதமான டெங்கி வைரசுகள் உள்ளன. அவை DENV 1, DENV 2, DENV 3 மற்றும் DENV 4 ஆகும். டெங்கி காய்ச்சல், டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் என்று டெங்கி காய்ச்சலின் வகைகளும் உண்டு. இதில் டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் தான் கொடூரமானது. இதற்கு இதுவரை எந்த தடுப்பு ஊசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல ஊருக்கு ஊர் இதன் வகைகளும் மாறுபடும். பருவமழைக்குப் பின் தான் இதன் தாக்கம் அதிகமாயிருக்கும். இன்னும் ஓரிரண்டு மாதம் தான் பின் அடுத்த பருவ மழைக்காலம் வரை தப்பிக்கலாம். டெங்கி மட்டுமல்ல எந்த வைரசுகளும் நம் உடலில் வந்துவிட்டால் சாகும் வரை நம்முடனே இருக்கும். நாம் பலவீனப்படும் போது அவை தலை தூக்கும். எனவே தான் தடுப்பு ஊசி அவசியம்.

சமீப காலமாக நம் தமிழகம் தாங்க முடியாத மின்வெட்டை சந்தித்து வருகிறது. மின்வெட்டுக்கும் டெங்கி காய்ச்சலுக்கும் தொடர்புண்டு. நினைத்த வேளையில் நம்மால் போர்வெல் இயந்திரங்களை இயக்க முடியாததால் நாம் தண்ணீர் பிடித்து வைக்கிறோம். ஆனால் அவையே இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகிறது. தற்போதுள்ள சூழலுக்கு தகுந்தாற் போல வாழக்கற்றுக்கொள்ளுங்கள். தப்பித்துக்கொள்ளலாம்.

முனைவர்.எஸ்.தினகரன்

No comments:

Post a Comment