முதல் பக்கம்

Feb 9, 2013

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சாதித்த மாணவிகள்

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2013,04:42 IST

தேனி : பனாரஸ் இந்து பல்கலை.,யில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பெரியகுளம் மாணவிகள் சாதித்து பதக்கமும், சான்றிதழும் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்,20வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு உத்திரபிரதேச மாநிலம், வாரனாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலை.,யில் நடந்தது. தமிழகத்தில் இருந்து 30 குழந்தை விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, ஆசிரியர் ஜெ.மஹபூப்பீவி தலைமையில், மாணவிகள் கே.ஜெனிபர்பாத்திமா, என்.ரிஸ்வானாபேகம், எ.ஜைனப்சித்திகா, எஸ்.ஜாகிரா காஹிபா ஆகிய மாணவிகள் பங்கேற்றனர்.

இவர்கள், மின்சார தட்டுப்பாட்டை நீக்கும் வழிமுறைகள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்பித்தனர். இந்த ஆய்வறிக்கை சிறந்த அறிக்கையாக தேர்வு செய்யப்பட்டு, மாணவிகளுக்கு பதக்கமும், பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது.
 
நன்றி: தினமலர்

No comments:

Post a Comment