முதல் பக்கம்

Feb 9, 2013

பெண் விஞ்ஞானி ..அலேட்டா ஹென்றியட்டே ஜகோபஸ்

வணக்கம் நண்பர்களே. இன்று பிப்ரவரி 9.. அலேட்டா ஹென்றியட்டே ஜகோபஸ் என்ற பெண் விஞ்ஞானியைத் தெரியுமா? ஆன் விஞ்ஞானிகளையே நமக்குத் தெரிவதில்லை. இதில் பெண் விஞ்ஞானி அதுவும் காலங்கார்த்தாலே என்கிறீர்களா? அதுவும் சரிதான். நம்ம கதைக்கு வருவோமா? இவர் டச்சு நாட்டில் பிறந்த ஓர் மருத்துவர். அது மட்டுமல்ல உலகத்தின் முதல் குடும்ப கட்டுப்பாட்டு முறையை கொண்டு வந்தவர் இவர்தான். நெதர்லாந்தில் பல்கலைக் கழகத்தில் படித்த முதல் பெண் இவரே.. அதுமட்டுமே முதலில் மருத்துவம் படித்தது மட்டுமா? வில்ஹெல்ம் மேபாக் தான் நெதர்லாந்து நாட்டின் முதல் பெண் மருத்துவர்.அலேட்டா ஹென்றியட்டே ஜகோபஸ் .(Aletta Henriëtte Jacobs, better known as Aletta Jacobs (9 February 1854 – 10 August 1929)யூத மருத்துவ குடும்பத்தில் சப்பெமீர் (Sappemeer.) என்ற இடத்தில், 1854 , பிப்ரவரி 9 ம் நாள் பிறந்தவர். தனது 13 வது வயதிலே பெண்களுக்கான தனிப் பள்ளியில் படித்தார்.மாலை நேரங்களில் தன அன்னை அண்ணா டெ ஜோங்(Anna de Jong,) மூலம் வீட்டுப் பணிகளுக்கு பயிற்று விக்கப்பட்டார் . தாய் டச்சு நாட்டைச் சேர்ந்தவர். அலேட்டா வீட்டு வேலை , பள்ளிப் படிப்புடன் மாலை நேரத்தில் ஜெர்மன், மற்றும் பிரெஞ்சு மொழி பயின்றார் தன தந்தையிடமிருந்து லத்தீனும் கிரீக் மொழியின் வளமையை கைக்கொண்டார்.
 
1871 ல் அலேட்டா ஊர் ஆண்டு குரோநிக்னேபலகலையில் (University of Groninge, ) படித்தார் பின்னர் ஆம்டர்டாம் பல்கலையில் பயின்றார். 1878 ல் மருத்துவப் பட்டம் பெற்றார் பெண்கள் மருத்துவம் படிக்க அனுமதிக்காமைக்காக பெண்களை மோசமாக நடத்துவதற்காகப் போராடினார் மேலும் சில காலம் மருத்துவராகப் பணியாற்றி பின் மனவியல் மருத்துவரானார். டச்சு பொது தொழிற்சங்கத்தின் உறுப்பினரானார் பின்னர் 1880 ல் Bernardus Hermanus Heldt சங்கத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்றார். 1903, டச்சு பெண்கள் அமைப்பில் தலைவரானா. 1915 ல் சர்வதேச பெண்கள் சமாதனம் & சுதந்திரம் அமைபப்பு (Women's International League for Peace and Freedom )உருவாக பெரிதும் உதவியவர் அவரது தனியறையை சங்கப் பணிகளுக்கு ஒதுக்கீ டு கொடுத்தார் பெண்களின் சுகாதாரம், குழந்தை பேணுதல் தொடர்பாய் அவர்களுக்கு தொடர் பயிற்சிகள் தந்தார். ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கு கட்டணம் ஏதும் வாங்காமல் மருத்துவ சேவை செய்தார். அலேட்டா தன இறுதி நாட்கள் வரை பெண்களுக்காகவும் ஆதரவர்ரவர்களுக்காகவும் உழைத்தார். பெண்கள் தங்கல் குடும்ப சுமையைக் குரர்க்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் உடல் நலனைப் பேணவேண்டும் என்றே, குடும்ப் கட்டுப்பாடு சிகிச்சி முறையை முதன் முதலில் அறிமுகப் படுத்தினர் அவர்க்தான் உலகத்திலேயே முதல் குடும்ப கட்டுப்பாடு மருத்துவ மனை துவங்கியவர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களின் உடல் நலம் கருதி செயல் பட்ட முதல் பெண் மருத்துவர்.
-பேரா.மோகனா

No comments:

Post a Comment