முதல் பக்கம்

Feb 9, 2013

குழந்தை விஞ்ஞானிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

தேனி
First Published : 02 February 2013 04:30 AM IST

தேனி மாவட்டம் சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து, பதக்கம் வென்ற மாணவிகளுக்கு, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பாராட்டுத் தெரிவித்தார்.

உத்தரபிரதேசம், வாரணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 20 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 30 குழந்தைகள் பங்கேற்றனர். இதில், தேனி மாவட்டத்தில் இருந்து பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கே. ஜெனிபர் பாத்திமா, என். ரிஸ்வானாபேகம், ஏ. ஜைனப் சித்திகா, எஸ். ஜாகிரா காஹிபா ஆகியோர், மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்கும் வழிமுறைகள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர். இவர்கள், குழந்தை விஞ்ஞானிகளாகத் தேர்வு செய்யப்பட்டு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.

குழந்தை விஞ்ஞானிகளாகத் தேர்வு செய்யப்பட்டு, பதக்கம் வென்ற மாணவிகள், ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் மஹபூப் பீவி ஆகியோரை, மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி: தினமணி

No comments:

Post a Comment