முதல் பக்கம்

Feb 9, 2013

மயக்கம்.. .தரும் விஞ்ஞானி....


ஒரு அறுவை சிகிச்சை என்றால் அதற்கு முக்கியமாக வலி தெரியாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை மருத்துவரை விட, மயக்கவியல் நிபுணர்தான் இதில் முதன்மைப் பங்கு வகிப்பவர் இல்லையேல் நோயாளியின் பாடு அம்பேல்தான்.அறுவை சிகிச்சைக்கு உதவிடும் மயக்க மருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? இதனை புழக்கத்துக்குக் கொண்டுவந்தவர், கார்ட்னர் குவின்சி கால்டன் என்ற அமெரிக்க பேராசிரியர்தான். அவரின் பிறந்த தினம் (Gardner Quincy Colton (February 17, 1814, Georgia, Vermont – August 9, 1898, Rotterdam) ) கார்ட்னர் குவின்சி கால்டன் 1814, பிப்ரவரி 7 ம் நாள்பிறந்தார். மருத்துவத் த துறையில் முதன் முதல் நைட்ரஸ் ஆக்சைடு என்ற மயக்க மருந்தைப் பயன்படுத்தியதும் இவரே.கால்டன் நியூயார்க்கில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது, மருத்துவப் பட்டம் பெறுமுன்னே, நைராஸ் ஆக்சைடை சுவாசித்தால், அது சிரிப்பூட்டும் என்றும் மேலும், அதுவே, உணர்விழக்கச் செய்யும் என்பதையும் கண்டறிந்தார் இதனை நியூயார்க் நகரில், ஒரு பொது இடத்தில், இதன் விளைவுகளை , சாதனைகளை செய்து காண்பித்தார் அதுவே அவரது இறுதி வெற்றியானது. பின்னர் கால்டன் இது தொடர்பான விரிவுரைகளுக்கு, ஊர் ஊராக பயணிக்கத் தொடங்கினார்

கால்டனின் பயணத்தின் போது ,1844 ல், டிசம்பர் 10 ம் நாள், கனெக்டிகட்டில் நிகழ்ந்த பொது, அந்த நிகழ்வை, ஒரு பல் மருத்துவர் பார்வையிடுகிறார் அவரின் பெயர் ஹோரஸ் வேல்ஸ் (Horace Wells) . கால்டனின் இந்த நிகழ்வின் போது , ஒரு பல்லைப் பிடுங்கலாமா என்கிறார் அது வெற்றிகரமாக நிகழ்ந்தது. அதன் பின் வேல்ஸ் அவரது பல் நோயாளிகளுக்கு, இந்த வாய்வைப் பயன் படுத்தத் தொடங்கினார். அதன் பின் 1863 ல் கால்டன் மற்றும் ஸ்மித் என்ற பல் மருத்துவர் இருவரும் இணைந்து,ஒரு மாதத்திற்குள் ஓர் ஆயிரம் பற்களைப் பிடுங்கினர் .. இது மிகப் பெரிய வெற்றியாய் இருந்தது . பின்னர் கால்டன் ஜான் ஆலன் என்பவருடன் இணைந்து கால்டன் பல் சங்கம் என்ற ஒன்றைத் துவங்கினார் இது பல் பிடுங்குவதில், சாதனையையும் சேவையை யும் செய்தது.1844-1867 க்குள் அவர் 10,000 பேருக்கு பல் பிடுங்க உதவினார் .கால்டன் மயக்கவியல் மருந்து தவிர மின் மோட்டாரை 1847 ல் கண்டுபிடித்தார்.

No comments:

Post a Comment