முதல் பக்கம்

Apr 13, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்: பெரியகுளம் கிளை மாநாடு

2ஆவது கிளை மாநாடு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் ஒன்றியக்கிளையின் 2ஆவது கிளை மாநாடு இன்று-ஏப்ரல்,13,2013- காலை 10 மணிக்கு பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார்.  கிளைச்செயற்குழு உறுப்பினர் எஸ்.கார்த்திகேயன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் மாநாட்டைத் துவங்கி வைத்துப் பேசினார். கிளைச் செயலாளர் எஸ்.ராம்சங்கர் செயலறிக்கையினை சமர்ப்பித்துப் பேசினார். அதன் மீதான விவாதம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.




புதிய நிர்வாகிகள்:

கிளையின் தலைவராக ஏ.எஸ்.பாலசுப்ரமணியன், துணைத்தலைவர்களாக எஸ்.மனோகரன், ஞானசுந்தரி ஆகியோரும் கிளைச்செயலாளராக எஸ்.ராம்சங்கர் இணைச்செயலாளர்களாக என்.அப்பாஸ், எஸ்.கார்த்திகேயன் ஆகியோரும் பொருளாளராக எஸ்.ஏ.செல்வராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.ஸ்ரீராம், ராதாமணாளன், டி.கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், ராமகுரு, கே.ஜி.பாலாஜி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். கிளை ஆலோசகர்களாக வி.ரமேஷ், ஏ.எஸ்.ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டனர்.

அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துமணிகண்டன், தேனி கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.


உலகை மாற்றிய அறிவியல் நூல்கள் கருத்துரை:



கிளை மாநாட்டினை முன்னிட்டு உலகை மாற்றிய அறிவியல் நூல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் கருத்துரையாற்றினார். இறுதியாக செயற்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன் நன்றி கூறினார்.

 


No comments:

Post a Comment