முதல் பக்கம்

Apr 4, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- போடி 3ஆவது கிளை மாநாடு

அறிவியல் வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-போடி வட்டார கிளையின் 3வது மாநாடு 03-04-2013 (புதன் கிழமை)மாலை போடி பேருந்து நிலையம் அருகில் மூட்டா அலுவலகத்தில் நடைபெற்றது. கிளைத்தலைவர் திருமிகு.காளிதாஸ் மாநாட்டிற்குதலைமை தாங்கினார். திருமிகு சிவாஜி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கௌரவத் தலைவர் திருமிகு எஸ்.எம்.செளகத் அலிதுவக்கவுரை ஆற்றினார். கிளை செயலாளர் திருமிகு ப.ஸ்ரீதர் செயலறிக்கையை வாசித்தார். . கிளை பொருளாளர் திருமிகுகோ.ஜெகதீசன் பொருள் அறிக்கை சமர்ப்பித்தார் . அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிளையின் தலைவராக திருமிகு காளிதாஸ் செயலாளராக திருமிகு ப.ஸ்ரீதர் பொருளாளராக திருமிகுகோ.ஜெகதீசன் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட ஆலோசனைகுழு உறுப்பினர் பேரா.ஆர்.பாண்டி, பெரியகுளம் கிளை செயலர் திருமிகு ராம்சங்கர், பெரியகுளம் கிளை தலைவர் திருமிகுபாலசுப்ரமணியம், மாவட்ட செயலர் திருமிகு தே.சுந்தர், தேனி கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கிளை பொருளாளர் திருமிகு ஜெகதீசன் நன்றியுரை வழங்கினார். கல்வி உப குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகுவி.வெங்கட்ராமன் மாநாட்டை ஒருங்கிணைத்தார். 

வி.வெங்கட்ராமன்

No comments:

Post a Comment