முதல் பக்கம்

Mar 25, 2013

அன்னஞ்சி-உயர்நிலைப்பள்ளியில் கருத்தரங்கம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச்,22 அன்று மாலை தேனி-அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து கருத்துரை வழங்கினார். ஆசிரியர் சுமன் நன்றி கூறினார். சுமார் 200 மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

1 comment: