முதல் பக்கம்

Mar 25, 2013

போடியில் தண்ணீர் தினக் கருத்தரங்கம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போடி வட்டாரக்கிளையின் சார்பில் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச்,22 அன்று முற்பகல் போடி பங்கஜம் நடுநிலைப் பள்ளியில் கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் தண்ணீரின் முக்கியத்துவம், இன்றைய பிரச்சனைகள் குறித்து கருத்துரை வழங்கினார். போடி கிளையின் செயலாளர் ப.ஸ்ரீதர் நன்றி கூறினார். இயற்கை வளங்களைக் காப்பதன் அவசியம் குறித்து மாணவர்களின் நாடகம் அரங்கேறியது. 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment