முதல் பக்கம்

Mar 1, 2013

தேசிய அறிவியல் தின விழா:


பிப்ரவரி 28. அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளை சார்பாக கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் தின விழா நடைபெற்றது. அறிவியல் தொடர்பான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் எளிய அறிவியல் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிரியர் திருமிகு. மெர்சி அவர்கள் தலைமை தாங்கினார் . தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளை செயலாளர் க.முத்துகண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெ. முருகன் அவர்கள் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் ரா. ராஜ்குமார் நன்றி கூறினார். ஆசிரியர்கள்- செல்வராஜ், நாகராஜன், கமர்நிசாபேகம், கஸ்தூரிதிலகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 SECRETARY

TNSF@CUMBUM

No comments:

Post a Comment