முதல் பக்கம்

Mar 14, 2013

மக்கள் விஞ்ஞானி ஆல்பர் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்.மார்ச் 14,1879

அன்புமிகு வணக்கம்.
இயற்பியல் உலகில் புரட்சிகர அத்தியாயங்களை எழுதிய,உலகைப் புரட்டிப் போட்ட, பல இயற்பியல் கொள்கைகளை மாற்றியமைத்த மக்கள் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த தினம்.இன்று. (march 14,1879---april18,1955).

ஜெர்மனியில் பிறந்த 20 ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானியான ஆல்பர் ஐன்ஸ்டீன் யூத இனத்தை சேர்ந்தவர;ஆனால் அதனை ஒரு போதும் கடைப்பிடித்ததில்லை. ஐன்ஸ்டீனின் குடும்பமே ஒரு மதனம்பிக்கையில்லாத குடும்பம் ஆகும்.ஜெர்மானிய சாம்ராஜ்யத்தின் ஊட்டம்பெர்க் நகரிலுள்ள உல்ம் என்ற ஊரில் பிறந்தார். ஐன்ஸ்டீனின் தந்தையின் பெயர் ஹெர்ன் ஐன்ஸ்டீன். இவர் ஒரு வியாபாரி. தாயின் பெயர் பாலின் ஐன்ஸ்டீன்ஐன்ஸ்டீன் தனது 5 ம் வாதில் தந்தை தந்த காம்பாஸை அவரி நீண்டகாலம் வரை த\தந்தையின் நினைவாக வைத்திருந்தார்.. ஐன்ஸ்டீன் தனது 5 வது வயதில் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். பின்னர் பள்ளிப் படிப்பை நன்றாகப் படித்ததுடன், வயலின் வாசிப்பதிலும் திறமை பெற்றிருந்தார். ஆனால் அதன்பின் அவருக்கு பேசுவதில் சிரமம் தரும் டிஸ்லெக்சியா என்ற நோய் இருந்ததால், பள்ளியிலிருந்து அனுப்பப்பட்டார்.இருப்பினும் தனது 12 வது வயதில் வடிவியல் தொடர்பான சில கருத்துக்களைக் கண்டறிந்தார்.
ஐன்ஸ்டீனின் பள்ளிப் படிப்புக்கும்,அவரது அறிவுக்கும் இம்மியளவும் கூட தொடர்பில்லை..அவர் தனது பள்ளிப் படிப்பை மூனிச்சில் முடித்து விட்டு தனது 16 ம் வயதில் ஒரு நுழைவுத் தேர்வு , தொழில்நுட்பக் கல்லூரியில் சேருவதற்காக எழுதினர். அதில் சேருவதற்கு போதுமான மதிப்பெண்களை பல் பாடங்களில் பெறவில்லை. ஆனால் இயற்பியலிலும், கணிதத்திலும் சூப்பட் கிரேடு பெற்றிருந்தார். இதனால் அந்த கல்லூரியின் முதல்வர் ஐன்ஸ்டீனை
ஸ்விட்சர்லாந்திலுள்ள ஒரு கல்வி நிறுவனத்துக்கு படிக்க அனுப்பினார். . அங்கு 1895-96 ல் பபள்ளிப் படிப்பை முடித்தார். ஆனால் அங்கு பேராசிரியர் வின்ட்லருடன் தங்கியிருந்தபோது, அவரின் அன்பு மகள் மேரிக்கை மிகவும் நேசித்தார். அவர் தந்தையின் சம்மதமும் பெற்றார். பின் அவர்களுக்கு லிச்சரி என்ற மகள் 1902ல் பிறந்தது. அதன் பின்னரே அவர்கள் இருவரும் 1903 ல் மணம் புரிந்து கொண்டனர்.அதன் பின் அந்த தம்பதிக்கு 1904ல் ஹான்ஸ் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும், 1910 ல் எடுவர்டும் பிறந்தனர். பின், ஐன்ஸ்டீன் மேரிக்குடனான திருமண பந்தத்தை 1915ல் முறித்துக் கொண்டார். அதன் பின் அவர் சுமார் 7 ஆண்டுகாலமாய் நேசித்த உறவுடன் இறந்த எலிசா லோவேண்டாலை 1919, ஜூன் 2 ம் நாள் மணம் செய்து கொண்டார். அவருடன் அவர் இதய நோயால் இறக்கும் வரை,1936 வரை வாழ்ந்தார்.

பட்டப் படிப்பு படித்து முடித்து இரண்டாண்டுக்காலம் வரை வேலை தேடி அலைந்தார். வேலை கிடைக்கவில்லை. பின பதிப்புரிமை செய்யும் அலுவலகத்தில் உதவி சோதனையாளராக சேர்ந்தார்.பின்னர 1908 ல் தான் ஐன்ஸ்டீன் ஓர் அறிவியல் அறிஞராக அங்கீகரிக்கப்பட்டார். அதன் பின் அவர் பெர்ன் பல்கலையில் பேராசியராக பணியேற்றார். அவரின் இந்த பணி வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் இயற்பியலில் பல சாதனைகளை நிகழ்த்தினாரே. 1911, ஒளி ஒரு விண்மீனிலிருந்து மற்றொரு விண்மீன் வளிமண்டலத்துக்கு வரும்போது, அதன் ஒளி நேர் கோட்டிலிருந்து வளையும் எனற சார்பியல் தத்துவத்தை கூறினார். உலகம் நம்பவில்லை, ஒளியாவது வளைவதாவது என ஏளனம் செய்தனர். பின்னர் அதன் பின் 1919 ,மே 29ம் நாள் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தின் போது, இந்த சார்பியல் தத்துவமும், ஒளி வளைந்தும் செல்லும் என்ற கோட்பாடும் நிரூபிக்கப்பட்டன.உலகம் முழுவதும் ஐன்ஸ்டீனின் தத்துவம் பேசப்பட்டது.


1919, நவம்பர் 9ம், நாள் உலகின் சிறந்த பத்திரிக்கையான டைம், ஐன்ஸ்டீனை அட்டைப்படத்தில் போட்டு கௌரவித்ததுடன், அவரின் தத்துவம் குறித்து, அறிவியலில் ஒரு புரட்சி, நியூட்டன் கொலகையைப் புரட்டிப் போட்ட கொள்கை என பாராட்டி எழுதியது. பின் 1921 ல், இதற்காக ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு கொடுத்து மரியாதை செய்யப்பட்டது.

ஐன்ஸ்டீன் 1922 ல், ஆசியா,சிங்கப்பூர், இலங்கை,பாலஸ்தீனம், ஜப்பான் என பல நாடுகளில் சுற்றி தனது உரைகளை நிகழ்த்தினார். பினனர்.1933 ல் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார். அமேரிக்கா உலகின் அனைத்து நோபல் பரிசு பெற்றவர்களையும் தன நாட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தது. ஐன்ஸ்டீன் போருக்கு எதிரானவர். ஐன்ஸ்டீனுக்கு அமெரிக்கக் அரசு கொடுத்த ஓய்வூதியத் தொகை அதிகம் என்று பாதிக்கு மேல் திருப்பிக் கொடுத்துவிட்டார்.



1940 முதல் ஐன்ஸ்டீன் அமெரிக்க பிரஜை ஆனார். அதன் பின் அமெரிக்க அதிபர் தயாரிக்க விருந்த , மன்ஹாட்டன் திட்டமான அணுகுண்டு தயாரிக்கும் ஒப்பந்த்தத்தில் கையெழத்து போட்டமைக்காக தான் இறக்கும் தருவாயில் தன நண்பரிடம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். மேலும் அமெரிக்க ஜப்பான் தோல்வியும் நேரத்தில் அதன் மேல் பொழிந்த குண்டு மழைக்கும், கோடிக்கணக்கான மக்களின் உயிர்ப்பலிக்கும் ஐரோப்பிய த்த்த்துவஞாநியான பெட்ரண்ட் ரஸ்ஸலுடன் இணைந்து அணு ஆயுத எதிர்ப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டு பெட் ரண்ட் ஐன்ஸ்டீன் உடன்படிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டது.1951ல் ஐன்ஸ்டீனை இஸ்ரேல் அதிபராக /குடியரசுத் தலைவராக பதவி ஏற்க அழைத்த போது , பெருந்தன்மையுடன் மறுத்த மாமேதை ஐன்ஸ்டீன்..தன வாழ்நாளில், ஐன்ஸ்டீன், 300 க்கு மேலான அறிவியல் கட்டுரைகளும், 150 அறிவியல் ஆராய்ச்சிகளும் செய்திருந்தார்.ஐன்ஸ்டீன்1955, ஏப்ரல் 19 ம் நாள் தான் சுவாசிப்பதை நிறுத்திக் கொண்டார். இறந்த பின்னர் அவரது மூளை எடுத்து வைக்கப்பட்டது, சோதனைக்காக..
பேரா.மோகனா

No comments:

Post a Comment