
மாலை 3 மணிக்கு சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.. கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் அறிவியல் தினம் குறித்த அறிமுக உரையாற்றினார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டக் கருத்தாளர் எஸ்.தேவராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மேஜிக் நிகழ்ச்சிகளை செய்துகாட்டினார். பள்ளியின் சார்பில் அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பலரும் செய்து கொண்டு வந்த எளிய அறிவியல் கருவிகளின் கண்காட்சி நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் ரமேஷ், ராஜேஷ் மற்றும் செந்தில் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மிகவும் அற்புதம்
ReplyDeletesura