முதல் பக்கம்

Mar 25, 2013

வனதினக் கருத்தரங்கம்



உலக வன நாளை (மார்ச்,21) முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வளர்ச்சி உபகுழுவின் சார்பில் மார்ச்,21 முற்பகல் தேனி-அன்னஞ்சி அரசு கள்ளர் உயர் நிலைப்பள்ளியில் வனதினக் கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். ஆசிரியர் சுமன் வரவேற்றார். மாவட்டக் கல்வி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முனைவர்.வனராசா இதயகீதன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பேரா.சோ.மோகனா அவர்கள் வனதினக் கருத்துரை வழங்கினார். அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை வளர்ச்சி உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமணிகண்டன் ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment