முதல் பக்கம்

Mar 25, 2013

பெரியகுளம்-வனதினக் கருத்தரங்கம்





உலக வன நாளை (மார்ச்,21) முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வளர்ச்சி உபகுழுவின் சார்பில் மார்ச்,21 பிற்பகல் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வனதினக் கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்க ஆர்வலர் ஜெ.மகபூப் பீவி ஆசிரியர் தலைமை வகித்தார். வளர்ச்சி உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமணிகண்டன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பேரா.சோ.மோகனா அவர்கள் வனதினக் கருத்துரை வழங்கினார். அதில் மேற்குத்தொடர்ச்சி மலையின் சிறப்புகள், உயிர்ச்சூழல் குறித்துப் பேசினார். அறிவியல் ஆசிரியர் எஸ்.பிரேமா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்துகொண்டனர். அனைவரும் வனப்பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment