முதல் பக்கம்

May 11, 2011

கூடலூரில் வனவளம் காப்போம் கருத்தரங்கம்

தினத்தந்தி
நாள்:மார்ச் 21,2011
2011ம் ஆண்டை சர்வதேச வனவள
ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்திருப்பதைத்
தொடர்ந்து தேனிமாவட்டம்
கூடலூர் வ.உ.சி.நடுநிலைப்பள்ளி
வளாகத்தில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளிகள்தோறும்
விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்திவருகிறது.

முதன்முறையாக கூடலூர் பள்ளியில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
வ.உ.சி.நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியை வனிதாமணி தலைமை தாங்கினார்.
அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் வரவேற்று பேசினார்.

கவிஞர் ஓவியா தனசேகர் பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர்
தே.சுந்தர்,அறிவியல் இயக்க ஆர்வலர் சி.பிரகலாதன்
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

துளிர் இல்லம்,மழலையர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உட்பட
150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வ.உ.சி.பள்ளி ஆசிரியர் கா.சிவமூர்த்தி நன்றி கூறினார்.
:சுந்தர்

No comments:

Post a Comment