முதல் பக்கம்

May 12, 2011

மனதை.. மயக்கும்.. குங்குமப்பூ..!

 *மனதை.. மயக்கும்.. குங்குமப்பூ..!*

* *
**
 *வளைகாப்பு*


**
 **
 "ஏண்டா ரமேஷ், ஒங்காத்துக்காரி,  புள்ளாண்டா இருக்கிறாளாமே..!

 ஆமாம் மாமி.

அது சரி. மறந்துடாமே,குங்குமப்பூ வாங்கிக்கொடுடா  ..!

அது எதுக்கு மாமி?

அபிஷ்டு, அபிஷ்டு . இந்தக் காலத்துலே, இது கூட தெரியாம இருப்பாளா? அதாண்டா,
பொண்டுகள் புள்ளாண்டா இருக்கப்போ, குங்குமப்பூ சாப்பிட்டா, கொழந்த செக்கச்
செவேல்ன்னு பொறக்கும். எனக்கும் கூட, ஒங்க மாமா வாங்கிக்கொடுத்தார்.

இப்பவா மாமி?

அசடு, அசடு  . மணி பொறந்தப்போடா..! தனியாளா இருக்கே..! தெனம் ராத்திரி, பாலிலே
குங்குமப்பூ போட்டு ஆத்துக்காரிக்கு கொடுடா..! ஒன் புள்ளையாவது செவப்பா
பொறக்கட்டும். "

   *குங்குமப்பூவும்  ... உடல் சிவப்பும்...!*

* *    **
 **
*
 *

  இது போல, நிறைய உரையாடல்களை, நாம் நிறைய கேட்க நேரிடுகிறது. ஆனால்,
குங்குமப்பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்குமா? சாப்பிட்டவர்களை
எல்லாம் கேட்டு பாருங்கள்..! ம். ம். மூச்சு  விட மாட்டார்கள். அந்தக் கதை
எல்லாம் ஆகாது நண்பா..! குழந்தைப் பாப்பாவின்  நிறம் என்பது அதன் அம்மா, அப்பா,
பாட்டி, தாத்தா, அத்தை, மாமா வின் வழி பரம்பரையை சார்ந்தது. நீங்க என்னதான்,
குங்குமப்பூ, குங்பூ  , மருந்து மாத்திரை, சாப்பிட்டாலும், மாய மந்திரம்
செய்தாலும், கஜ குட்டிக் கரணம் போட்டாலும்,பரம்பரை நிறத்தை மாற்ற
முடியாது..நண்பா..! உங்களது  அனைத்து நட்பு வட்டத்திலும் சொல்லி வையுங்கள்.
வீணே குங்குமப்பூவில் பணத்தை விரயம் பண்ண வேண்டாம். ..!

 *உலகின்..  விலையுயர்ந்த .. நறுமணப்பொருள்! *

* *  **
 **

**
 **
 *அரேபியா*

**
 **

* * உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த, மதிப்பு மிக்க  நறுமணப் பொருள்
குங்குமப்பூதான். எடையளவில், உலகின் விலை அதிகம் உள்ள வாசனைப் பொருள்
குங்குமப்பூ . இதன் விலை என்ன தெரியுமா? ஒரு கிராம் குங்குமப்பூ..ரூ 400 /=
க்கும் மேல்...! என்ன மயக்கம் போட்டுவிட்டீர்களா? கிட்டத்தட்ட தங்கத்தின்
விலைதான் எனலாம். இதனை தங்க வாசனைப் பொருள் என்றே அழைக்கின்றனர். குங்குமப்பூ
என்பது,ரோஸ் குங்குமப்பூ என்று சொல்லப்படும் மலரின்,உலர்ந்த  மகரந்த
தாள்தான்.குன்குமப்போவின் மணத்தையும், தரத்தையும், நிறமித்தன்மையையும்ம்
நிர்ணயம் செய்யும் திறமை பெற்றவர் இந்த ம்கரந்தம்தான். இதன் அறிவியல்
பெயர்..குரோகஸ் சாடீவாஸ் லின்னேயஸ் ( Crocus sativus Linnaeus ) என்பதாகும்.
சாப்ரன்(*saffron* ) என்ற ஆங்கிலச்சொல்    13 ம் நூற்றாண்டில், பழைய பிரெஞ்சு
வழக்கின் வழியே லத்தீனுக்குப் போய், சாப்ரானம் (*safranum*) ஆனது. ஆனால்
இது,சாப்ரான்(*za'farān*) என்ற  அரேபிய/பெர்சிய சொல்லிலிருந்து வந்தது என்றும்
கூறப்படுகிறது. இந்த வார்த்தைக்கு, "தங்கநிற மகரந்தத்தாளைப்
பெற்றிக்கிற"("having golden stigmas")   என்றே பொருளாகும்.

    *சரித்திரம்..படைத்த...சாப்ரான்..! /கலாச்சார..பாலமான ...குங்குமப்பூ...!*

* *    **
 **
 *நாகரிகம் உலவிய இடங்கள்*

* ***
 **
 *குங்குமப்பூ சாதம்*
 வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து, இன்று வரை உணவிலும், பானத்திலும் மனதை
மயக்கும் மணம் உள்ள பொருளாக குங்குமப்ப்பூ   பயன்படுத்தப்பட்டு  வருகிறது.
அதுமட்டுமா? குங்குமப்பூ, பல கலாச்சாரங்களை, நாகரிகங்களை இணைக்கும் பாலமாக
இருந்திருக்கிறது. ஆம்.  குங்குமப்பூ, உலகின் மிகவும் விலை மதிப்பற்ற
பொருளாகவே  பல மனித நாகரிகங்களை, கலாச்சாரங்களை
சந்தித்திருக்கிறது.ஆப்பிரிக்கா,ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என பல கண்டங்களிலும்
குங்குமப்பூவின் பயன்பாடு பரவலாக  பரவி உள்ளது. அதன் சிவந்த மகரந்த இழைகள்,
கேக் வகைகள், இனிப்பு வகைகள், பான வகைகள், ஒயின் போன்ற மது வகைகளில் கலக்கப்
படுகின்றன. அதன் பயன்பாடு காலம் கடந்தது.

         *வரலாறுபேசும்...குங்குமப்பூ..விவசாயம்..!*

* *  **
 **
 *குங்குமப்பூ விளையும் நாடுகள்*
 குங்குமப்பூ  பயிரிடுதலும் கூட, சுமார் 3,500 ஆண்டுகளுக்கு
முற்பட்டது.  கொஞ்சம் கசப்பு சுவையுடன்,புல் வாசனையுடன்  இருக்கும்
குங்குமப்பூவை, மனிதர்கள் பல வகைகளில் பயன்படுத்தி இருக்கின்றனர். இதனை இனிப்பு
பொருள்களை அலங்கரிக்கவும், நறுமணத்துக்காகவும் உபயோகப் படுத்துகின்றனர்.
குங்குமப்பூ வண்ணம் தரும் பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும் கூட வளைய
வருகின்றது. தென்மேற்கு ஆசியாவே இதன் தாயகம். இருந்தாலும் கூட,
வாணிபரீதியாக பித்தளை காலத்தில்தான் ,முதன் முதல், இத்தாலிக்கு
அருகிலுள்ள கிரீட்டில் பயிரிடப்பட்டது.

        *அரை லட்சம்.. வயதான... குங்குமப்பூ ஓவியம்..!*

*      *
 **
 *குங்குமப்பூ அறுவடை செய்யும் பெண்*
* *மனித  வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்,   சுமார் 50,000 ஆண்டு
முன்பே, குங்குமப்பூ நிறமிகள் கொண்டு ,வரைந்த  சித்திரங்கள் /குகை
ஓவியங்கள்  வரலாற்றுக்கு முற்பட்ட வட மேற்கு இரானின் பகுதிகளில்
இன்றும் இருக்கின்றன. பின்னர் சுமேரியர்கள் 4,000-7,000 ஆண்டுகளுக்கு
முன்பாகவே , காட்டில் காணப்படும் குங்குமப்பூவினை மருந்தாகவும், மாய மந்திரப்
பொருளாகவும் பயன்படுத்தினர்.பின்னர் குங்குமப்பூ யுரேசியா முழுவதும் பரவி,
அதன்பின், வடஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் பசிபிக் கடல் தீவுகள் முழுவதும்
பரவியது.

*குங்குமப்பூ இழையோடிய..ஆடையும்.. படுக்கையும்..!  *

* *  **
 **
* ** *

* * பழங்கால பெர்சியர்கள்*(ஈரானியர்கள் ).*,டெர்பணா( Derbena) மற்றும்
இஸ்பாகன்(Isfahan) நகர்களில்,  பெர்சிய குங்குமப்பூவினை கி.மு 10 ம்
நூற்றாண்டிலேயே வளர்த்தனராம். இந்த பகுதிகளில், குங்குமப்பூவினை நூலிழைகளில்
கலந்து, ஆடை தயாரித்தனர். இந்த ஆடைகள் புனித வழிபாடுகளுக்கு
அளிக்கப்பட்டது.பெர்சியர்களிடம் குங்குமப்பூ, வண்ணம் உருவாக்கவும்,
நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும்,  வலம் வந்தது.உடலின் கடின உழைப்புக்குப்
பின், குங்குமப்பூவையும், சந்தனத்தையும் கலந்து நீரில் கரைத்து,  பெர்சியர்கள்
குளித்து வெயிலின்  உக்கிரத்தைக் குறைத்து இளைப்பாறினர். அது மட்டுமா?
குங்குமப்பூ இழைகளை படுக்கையில் பரப்பி படுத்து உறங்கினர்.மன அழுத்தத்தை
தீர்க்கும் மருந்தாக, மன ஆறுதல் தரும்**
 **
 *குங்குமப்பூ தேநீர்*
பொருளாக பெர்சியர்கள் இதனை கருதி, தேநீரில் கலந்து அருந்தினர். பெர்சியர்
அல்லாத மக்கள், பெர்சியர்கள் இப்படி குங்குமப்பூவினை, மருந்தாகப்
பயன்படுத்துவதைப் பார்த்து, மிரண்டனர்;அரண்டனர். ஏன் தெரியுமா? இது பால்
உணர்வைத்தூண்டும் என்பதால்தான்.

 **
 **
 *பாலில் கலந்த குங்குமப்பூ*
இன்றும்கூட, பிராமணக் குடும்பங்களில், முதலிரவின் போது குங்குமப்பூ  கலந்த பால்
கொடுக்கப்படுகின்றது.

       *தாவரவியல் பதிவும்.குங்குமப்பூ..மலையும்.!*

* *  **
 **
அசிரியன்கள் வம்சத்தில், கி.மு. 7 ம் நூற்றாண்டிலேயே , அஷுர்பாநிபால்
(Ashurbanipal) என்ற அரசரின் நிர்வாகத்தில், முதன்முதல்  குங்குமப்பூ வளர்த்தது
தொடர்பாக தாவரவியல் குறிப்பேடுகளின்  பதிவில் உள்ளது . இஸ்ரேலில் உள்ள நாகேவ்
பாலைவனத்தில்,ஹார் கார்கோம் (*Har Karkom*) என்ற மலை உள்ளது.ஹார் கார்கோம்
என்பதன் பொருளே, குங்குமப்பூமலை  என்பதே..! எகிப்து மற்று ஜெருசலத்தில்,
குங்குமப்பூவின் பயன்பாடு பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4,000
ஆண்டுகளுக்கு மேலாக, பரவலாக குங்குமப்பூ பயன்படுத்தப்படுவதுடன், அது சுமார்
90  நோய்களின் நிவாரணியாக இருந்தததாகவும் பதிவுகள் சொல்லுகின்றன.* *



  * மாவீரர் அலெக்சாண்டர்..காயம்.கழுவிய/களைந்த ..குங்குமப்பூ..!*

        **
 **
 *மாவீரன் அலெக்சாண்டர்*

* *  ஆசியப் படையெடுப்பின் போது, மாவீரர் அலெக்சாண்டர், பெர்சிய குங்குமப்பூவை
பல வழிகளில் பயன்படுத்தி,தூள் கிளப்பினாராம். . குடிக்கும் பானங்களில்,
அரிசியில்/சாதத்தில் , குளிக்கும் நீரில் என கலந்து, போரின்போது ஏற்பட்ட
காயங்களை குணப்படுத்தினார். அலெக்சாண்டரின் போர்வீரர்களும், இந்த பழக்கத்தைக்
கைப்பற்றியதுடன்,பெர்சியர்கள் போலவே  குங்குமப்பூ குளியலை கிரீசுக்கும் கொண்டு
சென்றனர். பின்னர் தெற்கு ஆசியாவுக்குள் விஜயம் செய்தது குங்குமப்பூ.காஷ்மீர்
மற்றும் சீனாவுக்கு 900 -2,500 க்கு இடைப்பட்ட    ஆண்டுகளில் அடி எடுத்து
வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது

      * குங்குமப்பூவின் இந்திய நுழைவும்..மஞ்சள் நிற அங்கியும்..!*

* *     பெர்சியர்கள் ஊடுருவலாலும், காஷ்மீரின் காலனியாதிக்கத்தாலும்,
குங்குமப்பூ, புதிய தோட்டங்களிலும், பூங்காக்களிலும்  பயிரிடப்பட்டது. இதன்
பின், போனிசியன்கள்( Phoenicians ), காஷ்மீர் குங்குமப்பூவை, வண்ணம் தோய்க்கும்
பொருளாகவும், ஏகாந்த மன நிலை தரும் சிகிச்சை பொருளாகவும் விற்றனராம். இதன்
மூலமாக, குங்குமப்பூ, உணவாக, நிறமியாக தென்பகுதி ஆசியாவுக்குள் நுழையத்
துவங்கியது.  கௌதம   புத்தர் மறைந்த பின், அவரின் சீடர்கள்/புத்த பிட்சுக்கள்,
குங்குமப்பூ  நிற அங்கிகளை அணிந்தனர். இந்த ஆடைகள் குங்குமப்பூவில்
தோய்த்தெடுத்தது  இல்லை. இவை மஞ்சள்/பலாபழத்தின் மூலம் நிறம் பெற்றவையாகும்.
தமிழர்களும், சுமார் 2 ,௦௦௦000  ஆண்டுகளுக்கு மேலாக, குங்குமப்பூவை உபயோகப்
படுத்துகின்றனர். தமிழில், குங்குமப்பூ, "*ஞாழல் பூ*"  என்றே அழைக்கப்படுகிறது.
இது தலைவலி நீக்கியாகவும், வலியில்லா பிரசவ மருந்தாகவும் பயன்படுகிறது.

      *புத்தருக்கு.. தரப்பட்ட...காஷ்மீர்...குங்குமப்பூ!*

* * சில வரலாற்றியலாளர்களின்  கருத்துப்படி, பெர்சியாவிலிருந்து மங்கோலியர்கள்,
சீனாவுக்குள் ஊடுருவியபோது, அப்படியே அவர்களுடன் குங்குமப்பூவும் வந்தது. கி.மு
2000 -3000    ஆண்டுகளிலேயே, சீன மருத்துவ நூல்களில், சென்னோன்கின்னின்  பெரிய
மூலிகை என்ற தலைப்பில் 40 தொகுதிகள் குங்குமப்பூ பற்றி எழுதியுள்ளனர். இதில்
சுமார் 250 வகை, தாவர வேதிப்பொருள்கள் உள்ளன. குங்குமப்பூ,  மருந்தாக, பலவகை
நோய்களை நீக்கும் சர்வரோக நிவாரணியாகவே  கூறப்பட்டுள்ளது.கி.பி 3ம்
நூற்றாண்டில் கூட, சீனர்கள், குங்குமப்பூவை, காஷ்மீரிலிருந்துதான்  பெற்றனராம்.
வான் சென் என்ற மருத்துவ வல்லுநர், புத்தருக்கு தருவதற்காகவே, காஷ்மீரிகள்
குங்குமப்பூ வளர்த்ததாக குறிப்பிடுகின்றார். மேலும், இதன் நறுமணத்திற்காக  ,
குங்குமப்பூவினை ஒயினில் கலப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.**
 **
 *கோமதீஸ்வரர் சிலை*
கி.பி,. 938 லிருந்து, ஒற்றைக்கல்லினால் ஆன கோமேதேஸ்வரர் சிலைக்கு 12
ஆண்டுகளுக்கு ஒருமுறை, குங்குமப்பூ கலந்த எண்ணெயில் அபிசேகம் செய்யும்
மகாமஸ்டக் அபிஷேக(Mahamastakabhisheka )  விழா நடைபெர்றுகிறது.

       *மருந்தும் ...நறுமணப்பொருளுமான..குங்குமப்பூ.! *

     **
 **
குங்குமப்பூ, ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் கூட, நடமாடியது. கி.மு
,௦-, களில், கிரேக்கத்துக்கு அருகில் கிரேட் பகுதியில் வாழ்ந்த
மின்னோயன்கள்(Minoans ),குங்குமப்பூ, நோய் வந்த காலத்துக்குப்பின் உடல் நலம்
காக்கும் பயன்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தியதை, படமாக வரைந்துள்ளனர்.
கிரேக்க கதைகள், குங்குமப்பூவின், கடல் வழிப் பயணத்தை அற்புதமாக, சுவர்
படங்களின் மூலம் நமக்கு காட்டுகின்றன. உலகின் அதிக மதிப்புள்ள குங்குமப்பூவைக்
காப்பாற்ற , நிறைய போர்கள் நடந்துள்ளனவாம். பழங்கால, மத்தியதரைகடல் வாழ்
மக்கள், குறிப்பாக, எகிப்தின் வாசனை திரவியலாளர்கள், காசா (Gaza) வின்
மருத்துவர்கள், ரொடிசின் நகர மாந்தர்கள், கிரேக்கத்தின் நீதிமன்ற அதிகாரிகள்
எனப் பலரும், குங்குமப்பூவை நறுமண நீருடனும், வாசனை திரவமாகவும், தைலமாகவும்,
களிம்பாகவும்,கண் இமைகளின் பூச்சாகவும், புனிதப் பொருளாகவும், நோய்
சிகிச்சைக்கான மருத்துவ மூலிகையாகவும் கொடி கட்டிப் பறந்தது.

   *வாணிபப்..பாலமான..குங்குமப்பூ..! *

* * **
 **
 *கொரிசியன் குகை*

**
 **
 *சான்டோரினியில் குங்குமப்பூ பறிக்கும் பெண்*

* *கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே,குங்குமப்பூ மிக நீண்ட தொலைவுக்குச் செல்லும்
வாணிபப் பொருளாக இருந்ததாம். கிரீஸ் -ரோமன் காலத்தில், கி.மு 8 முதல் -கி.பி 3
ம் நூற்றாண்டு வரை குங்குமப்பூ முக்கிய பங்கு வகித்தது. பின் கிரீட்டின்
மின்னோயர்கள்,கிரேக்கத்தின் தீவான சான்டோரினி (Santorini ) யில், இளம்
பெண்களும், குரங்கும் குங்குமப்பூ சேகரித்தனர். பழங்கால கிரேக்கர்கள், கிரேக்க
மாலுமிகள் ஆசியா மைனரின் தென் கடற்கரையிலுள்ள சிசிலியா  சென்று, உலகின் விலை
மதிப்பு மிக்க குங்குமப்பூவை கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. அங்குதான் அப்போது
நல்ல தரமான குங்குமப்பூ விளைவிக்கப்பட்டதாம். மேலும் கிரேக்கர்கள் தங்களின்
பார்னாசஸ் மலையிலுள்ள கொரிசியன் குகைகளில் (Corycian Cave of Mount Parnassus )
குங்குமப்பூவை  ரகசியமாய் பயிரிட்டனர் என்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

     *பேரழகி..கிளியோபாட்ராவின்..குங்குமப்பூ..குளியல் .!.*

    *  *
 **
 *எகிப்தின் வரைவுகள்*

* *  **
 **
 *எகிப்திய பேரரசி கிளியோபாட்ரா*
எகிப்தின் ஹெலேனிஸ்டிக்(hellenestic) பரம்பரையின் மகாராணியான கிளியோபாட்ரா,
தனது தங்க நிற உடலைப் பாதுகப்பதர்காகவும், தன் காதலரை
கவர்வதற்காகவும்  ,குளியல் தொட்டியில் ஏராளமான குங்குமப்பூ போட்டு குளித்து
விட்டு , மணக்க, மணக்க வருவாராம். குங்குமப்பூ வாசனை பாலின உணர்வினை தூண்டும்
என்று காலம் காலமாக நம்பட்டு வருகிறது. மனித இனம். வரலாற்றுக்கு முற்பட்ட
காலத்திலிருந்தே பயன்படுத்திய பழங்கால மருத்துவ  மூலிகைகளில் குங்குமப்பூவும்
ஒன்று. . எகிப்திய மருத்துவர்கள், பலவகை, வயிற்று நோய்களுக்கும்,
குங்குமப்பூவினையே மருந்தாகப் பயன்படுத்தினர். லேவண்ட், லெபனான், டையர் போன்ற
மத்தியகிழக்கு பகுதிகளில்,குங்குமப்பூ இழைகள்  துணிகளுக்குப்  போடும் வண்ணமாக
இருந்தது. மேலும், ரோம் நகரின் புகழ பெற்ற மருத்துவரான ஆலுஸ் கார்நிலியாஸ்
செல்சாஸ்(Aulus Cornelius Celsus) என்பவர், இருமல், வயிற்று வலி, சொறிசிரங்கு,
காயம் போன்றவைகளுக்கும், குங்குமப்பூவே, மருந்தாக பரிந்துரைத்துள்ளார்.
ரோமானியர்கள், சர்வரோக நிவாரணியான குங்குமப்பூவை  மிகவும் நேசித்தார்கள். ரோம்
சாம்ராஜ்ஜியம் விழும்வரை, குங்குமப்பூ விவசாயம் செய்தனர். ஆனாலும் கூட, இன்று
வாசனை திரவியங்களின் இடமான, பிரெஞ்சுக்கு 8 ம் நூற்றாண்டு அல்லது  14
ம் நூற்றாண்டிலோதான் குங்குமப்பூ விஜயம் செய்ததாம்.

     *குங்குமப்பூ..இறக்குமதியும்..குங்குமப்பூ..போரும்..!*

   **
 **
 *பிளேக் நோயினால் இறப்பு*

* *    ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்  பின், ஐரோப்பா நகரங்கள் குங்குமப்பூவை
பயிரிட்டன. முகம்மதியர்களின் நாகரிகம் மீண்டும் ஸ்பெனுக்குள் குங்குமப்பூவைக்
கொண்டுவந்தது. 14ம் நூற்றாண்டில், பிளேக் நோயினால் ஏற்பட்ட கருப்பு இறப்பின்
போது, குங்குமப்பூ கலந்த மருந்துகள் நோயாளிக்கு கொடுக்கப்பட்டன. நோயாளியின்
அறையில் குங்குமப்பூ வைக்கப்பட்டது. குங்குமப்பூவின் பயன்பாடும்
விலையும், ஆகாசத்துக்குப் பறந்தது . ஏராளமான குங்குமப்பூ, மத்தியதரைக்கடல்
நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதில் ஒரு கப்பல் திருட்டும் நடந்து,
அதனால், 14 வார, "*குங்குமப்பூ போரும்*" வெடித்தது. இதன் பரவலான, பரபரப்பான
பயன்பாட்டிற்குப் பின், இதில் கலப்படமும், கலந்தது.     இங்கிலாந்தில்,
குங்குமப்பூ நகரம் உருவானது. இதுவே, குங்குமப்பூ வளர்க்கும், வாணிபம் செய்யும்
இடமாக விளங்கியது. இருப்பினும், மற்ற பருகும் பானங்களான  சாக்லேட், காபி,
தேநீர் மற்றும் வெனிலா வாணிபரீதியான    போட்டியில் இறங்கியதும்,
குங்குமப்பூவின் புகழ் கொஞ்சம் மங்கத்தொடங்கியது. பின் பிரெஞ்ச், இத்தாலி,
ஸ்பெயினில் மட்டும் குங்குமப்பூ பயிரிட்டனர்.

     * குங்குமப்பூ..கிராமம்! *

 **
 **
 *குங்குமப்பூ நகர்*


   இலண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு அருகில் ஒரு கிராமம் உள்ளது. அதன்
பெயர். குங்குமப்பூ வால்டன் எனப்படுகிறது. இந்த ஊரில் மத்திம காலத்தில்(5 -15
ம் நூற்றாண்டில்) கம்பளிதான் முக்கிய வாணிபப் பொருளாக இருந்தது. 16-17 ம்
நூற்றாண்டுகளில் குங்குமப்பூ பரவலாக ஊர் முழுவதும் பயிரிடப்பட்டது.ஏனெனில்
அப்போதுதான் குங்குமப்பூவின் மகிமை உலகம் முழுவதும் பரவி இருந்தது. இனிப்பு
பொருள்கள், மிட்டாய், மருந்து, மாத்திரை தயாரிப்பு, உணவுப்பொருளில்
கலத்தல்,உடல் வலி குறைய மற்றும் விலை அதிகமான நிறமி என பல உருவம் எடுத்து பணி
புரிந்தது குங்குமப்பூ. இதனாலேயே இது அதிகமாய் சிப்பின் வால்டேனில் விளைவிக்கப்
பட்டது. இந்த ஊரில் குங்குமப்பூவின் வாணிபம் சக்கை போடு போட்டதால், இந்த
ஊருக்கு இயற்பெயரான, சிப்பின் என்பது மறைந்து, வியாபாரம் செய்யப்பட்ட பொருளே,
இதன் பட்டப் பெயராகி, குங்குமப்பூ வால்டன் என்று அழைக்கப் படலாயிற்று. உலகில்
முதன் முதலில் குங்குமப்பூவை உணவுப் பொருள்களில் வாசனைக்காக கலந்தவர்கள்
ஐரோப்பியர்கள்தான்.

     * குங்குமப்பூ.. தலைநகர்..!*

 **
 **
 *குங்குமப்பூ தலை நகர்*

* *        குங்குமப்பூ உலகம் முழுவது பயணித்தாலும், இன்றைய ஈரான் எனப்படும்
அன்றைய பெர்சியாதான் அந்தகாலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் கூட, உயர் ரக
குங்குமப்பூ உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னணியில் நிற்கிறது. ஆம்
நண்பர்களே, இன்று உலக உற்பத்தியில் ஈரானின் பங்களிப்பு மட்டும் 95 %-97 %
என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.இங்குள்ள கோரசன் ( Khorasan .) என்ற இடம்தான்,
உலகில் குங்குமப்பூவின் தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. மிக நீண்ட காலமாக,
குங்குமப்பூ பயிரிட்ட அனுபவத்தினால், இவர்களுக்கு அது பயிரிடப்படும் ,
யுக்தியும் பழக்கமும் கிடைத்துள்ளது. அதனாலேதான் ஈரானியக் குங்குமப்பூ
தனித்தன்மை வாய்ந்ததாக, உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளது.

    *குங்குமப்பூ ..விவசாயம்..!*

   **
 **
 *குங்குமப்பூ விவசாயம்*

**
 **
 *குங்குமப்பூ செடி*

* *   குங்குமப்பூ விவசாயம் என்பது கொஞ்சம் கடினமான  ஒன்றே..! குங்குமப்பூவில்
சுமார் 1500 வகைகள் உள்ளன.இதன் தாயகம்,பிறந்த இடம் பற்றிய புதிர்களும் கூட ,
குங்குமப்பூ பிரபலமானதற்கு காரணமாகும். இதன் விதையிலிருந்து இச்செடி
முளைப்பதில்லை. அதன் வேர்ப்பகுதில் உள்ள அடித் தண்டிலிருந்தே முளைக்கிறது.
குங்குமப்பூ விவசாயத்திற்கு அதிக நீர் தேவை இல்லை.  குங்குமப்பூவின் செடி
வெயிலும் நிழலும் உள்ள பகுதியில் நன்றாக வளரும். இது தண்டின் மூலமே பயிர்
செய்யப்படுகிறது. இதனை 7 -15 செ.மீ ஆழத்தில் நல்ல இடைவெளி விட்டு
நடப்படுகிறது.குங்குமப்பூ நடவு ஜுன் மாதம் செய்யப்படுகிறது.இலையிதிர்கலம்
மற்றும் குளிர் காலத்தில் குங்குமப்பூ செடி நன்கு வளருகிறது.  குங்குமப்பூ
மார்ச்-ஏப்ரல் மாதங்களில்தான் பூக்கும். எல்லா செடிகளும் அதிக பட்சம் இரண்டு
வாரத்துக்குள் பூத்து முடிந்துவிடும்.கோடையில் மட்டும் இந்த செடி சலனமின்றி
பேசாமல் இருக்கும். ஒரு செடியில் 1 -4 பூக்கள் மலரும்.பூவின் நீளம் 9 -10 செ.மீ
மட்டுமே. இதில் வயலெட் நிறத்தில் 6 இதழ்கள் இருக்கும். இதன் நுனியில் 3 மகரந்த
தாள்கள் நல்ல சிவப்பு வண்ணத்தில்  வெடித்து பிரிந்திருக்கும்.

     *அறுவடையும்..பதப்படுத்தலும்..!*

   **
 **
 *குங்குமப்பூ பிரித்தெடுத்தல்*

* *   குங்குமப்பூவின்  மலர்களை விடிகாலையிலேயே, பகலவன் உலா வருமுன்னே  ,
பறித்துவிட வேண்டும்.வெயிலில் இருந்தால் மலர்களின் நிறம் மங்கிவிடும்;தரம்
குறைந்துவிடும். இவை உலர்ந்தால்.. இதுதான் குங்குமப்பூ ..!ஒரு கிலோ உலர்
குங்குமப்பூ தயாரிக்க 1,00,000 -2,00,000 பூக்கள்/9,00,000 மகரந்தத்  தாள்கள்
வேண்டும். ஒரு கிராம் உலர் குங்குமப்பூ தயாரிக்க, சுமார் கிலோ பூவேண்டும்.
 ஆனால் காஷ்மீர் குங்குமப்பூவின் மகரந்தத்தால் கொஞ்சம் தடிமனாக இருப்பதால், ஒரு
கிராம் குங்குமப்பூ எடுக்க, சரியாக 190 பூக்கள்/570
மகரந்தங்கள் மட்டும் இருந்தால் போதும். குங்குமப்பூ பூக்கும்போது அழகான
லேவண்டர் (இளம் வயலெட் ) நிறத்தில்
இருக்கும்.சாதாரணமாய், குங்குமப்பூவின் விளைச்சல் என்பது , ஒரு ஹெக்டேருக்கு 10
கிலோதான்.

    *விலை.. அதிகமான.. குங்குமப்பூ..!*

   **
 **

* **<Photo48>*

* *   இதனை காற்றுப் புகாத ஒரு பாட்டிலில் போட்டு பத்திரமாய் ஈரப்பதம் இன்றி
அடைத்தது வைக்க வேண்டும். குங்குமப்பூ விலை அதிகமாக விற்பதன் காரணம் இதன்
உற்பத்தி செலவும்/உழைப்புக் கூலியும் தான். . ஆம், பூக்களைப் பறிக்க, மகரந்தம்
பிரித்தெடுக்க, பதப்படுத்த, தரம் பிரிக்க என அனைத்துப் பணிகளும் மனித
உழைப்பாலேயே நடை பெறுகின்றன.

   *குங்குமப்பூவின்..ஆராய்ச்சிகள்..! *

   **
 **
இத்தாலியின் அக்வில்லா பல்கலையின் பேராசிரியர் சில்வியா பிஸ்டி (Silvia Bisti)
என்பவர்,  கண் பார்வை தரும் நிறுவனத்துடன் இணைந்து, குங்குமப்பூவின்மருத்துவ
குணங்கள்,கண்ணை எப்படி பாதுகாக்கிறது என  அறிய ஆராய்ச்சி செய்தார்.பொதுவாக
குங்குமப்பூ கண்பார்வையை பாதுகாத்து சரி செய்கிறது. வயது முதிர்ந்தவர்களிடம்
உருவாகும் பார்வைக் குறைபாட்டையும் குணப்படுத்து கிறது. மேலும் இதில்
காணப்படும் எதிராக்சிகரணி (antioxidant)   பொருள்கள் மரபணுக்களை செம்மையாக
செயல்பட வைக்கிறது.  பிரான்ஸ் நாட்டின் ஆய்வுகள் உடல் எடையைக்
குறைக்கவும்,வயிற்றுப் பசியைக் கட்டுப் படுத்தவும் குங்குமப்பூ பயன்படுவதாய்
கண்டறிந்துள்ளன. மேலும் இது உடலின் செரடோனின்(Serotonin ) என்ற
ஹார்மோன் அளவையும் கட்டுப்படுத்தி, உடல் நிலையையும், மனநிலையையும் சீராக
வைப்பதாக அறிந்துள்ளனர்.இதானால் ஒருவரின் மனநிலை, பசி  , தூக்கம் மற்றும்
தசையின் சுருங்கும் தன்மை யாவும் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.இது அதிக உணவு
உண்பதையும் கட்டுப் படுத்துகிறது. இந்தியாவில் நாயர் என்பவர் 1991 ல் ஆய்வு
செய்து குங்குமப்பூ புற்றுநோயை எதிர்க்கும் மருந்துதான் என்று கண்டறிந்தார்.
சில ஆய்வுகள் இது தோல் புற்றை சரி செய்கிறது என தெரிவிக்கின்றன.



 *பலவகைகளில் பயன்படும்..நறுமணப்பூ..!*

 **
 **
 *குங்குமப்பூ அலங்காரம்*
 குங்குமப்பூ மருந்து உணவாக மட்டுமின்றி,பல தொழில்களிலும் புகுந்து,தன்
ஆட்சியை அங்கும் நிலைநாட்டி  களை கட்டுகிறது. இது புகையிலை தொழில், மதுபானத்
தொழில், பால் தொழில், முக அலங்கார தொழில்,முகத்துக்கான கிரீம்,  உடலுக்கு
தெளிக்கும் நறுமண பொருள் மற்றும் வண்ணச் சாயத் தொழில் போன்ற பலவகை
தொழிற்சாலைகளின் மைய அச்சாணியாய் , இயக்க மேலாளராய் இருந்து செயல்படுகிறது
குங்குமப்பூ.மேலும் குங்குமப்பூவினை எல்லா மத சடங்குகளிலும்
பயன்படுத்துகின்றனர். திபெத்திய புத்த பிட்சுக்கள் தங்களின் பிரார்த்தனைக்கும்,
பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும், குங்குமப்பூவை  பயன்படுத்துகின்றனர்.
*
 அரேபிய எழுத்துக்கள்
*
படம் வரையும் ஓவியக் கலைஞர்கள், குர்ஆன் போன்ற முகம்மதிய மத
புத்தகங்களில் குங்குமப்பூ கொண்டு,பட வரைவுகளைச் செய்தும், எழுதியும்
இருக்கின்றனர்.

       *குங்குமப்பூவின்.. தரம்  ..!*
 
_பேரா.சோ.மோகனா

No comments:

Post a Comment