முதல் பக்கம்

Dec 13, 2010

டிசம்பர் 13, இரவு வானின் பல வண்ண மத்தாப்பூ .. கொண்டாட்டம்

நண்பர்களே வணக்கம்.
வருடத்தில் 9 முறை விண்கற்கள் பொழிவு
(வானின் வண்ணப்
பட்டாசு கொண்டாட்டம் )
வானில் நடக்கிறது.
இது வால்மீன்கள் விட்டுச் சென்ற
தூசுதான்.
இவை எந்த விண்மீன் படலத்திலிருந்து
தெரிகிறதோ, அந்தப் பெயரை
வைத்து,
அந்த விண்கற்கள் பொழிவை அழைக்கிறோம்.
இன்று தெரியப்போகும்
விண்கற்கள்
பொழிவின் பெயர், ஜெமினியாய்டு விண்கல் பொழிவு.
அனைத்து
விண்கல் பொழிவுகளிலும்
ரொம்பவும், வண்ண மயமாக
காட்சி தரும் விண்கல்
பொழிவு இது.
இவைகளில் 65% வெண்மையாகவும்,
26 % மஞ்சளாகவும்,
மீதி 9 %
சிவப்பு,பச்சை, நீலமாகவும் தெரியும்.
இந்த விண்கல் பொழிவு,
பொதுவாக டிசம்பர் 11 -14 தினங்களில் தெரியும்.
இந்த ஆண்டு, டிசம்பர் 13 ம் நாள்

இரவு, நிறைய, ரொம்ப பிரகாசமாய்,
வானில் வண்ணப் பட்டாசாய் கொட்டும்.
இதனை,
இந்த ஆண்டு, அது தெரியும் நேரத்தில்,
நிலவு மறைந்து விடுவதால்
நாம்
நன்றாக கண்டுகளிக்க முடியும்..
சாதாரணக்கண்களாலேயே..!
வானின் வண்ண
மத்தாப்பு,
ஜெமினி படல விண்மீன்களான
காஸ்டர்,போலக்சிலிருந்து,கண்ணிமைக்கும் நேரத்தில்
வண்ண மயமாக, பல திசைகளுக்கும்

வேகமாகச் சென்று மறையும்.
ஜெமினி விண்மீன்கள்,
ஒரையான்(வேட்டக்காரன்)

விண்மீன் தொகுதியிலிருந்து
வடகிழக்கில் உள்ளது.
இன்று இரவு 10 .30
மணிக்கு
மேல்,வடகிழக்கு வானில், சுமார் 50 டிகிரி
உயரத்தில் தெரியும்.

ஆனால் பின்னிரவில்,சுமார் 2 மணிக்கு
மேல்தான் அதிகமான விண்கற்கள்
கொட்டும்.
நீங்கள் வானின் இந்த வேடிக்கையை,
விடிகாலை வரை பார்த்து
மகிழலாம்.
மணிக்கு 50 விண்கற்கள் எரிந்து விழும்.

_பேரா.சோ.மோகனா

No comments:

Post a Comment