முதல் பக்கம்

Dec 12, 2010

இளம் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா

டிசம்பர் 11,2010
கோவை கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு கடந்த டிசம்பர் 3,4,5 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லத்தின் மாணவன் சத்தியபிரவீன் தலைமையிலான ஆய்வுக்குழு கலந்து கொண்டது. அம்மாணவர்களுக்கான பாராட்டு விழா வீ.கேன்.பயிற்சி மையத்தில் நடைபெற்றது. பயிற்சி மைய பொறுப்பாளர் திருமிகு.எல்.சுரேந்தர் வரவேற்றார்.வேளாண் அலுவலர் திருமிகு.தெய்வேந்திரன் அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ஹ.ஸ்ரீராமன் துளிர் இல்ல ஆலோசகர் திருமிகு.பிரகலாதன்,தமிழாசிரியர் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். வழிகாட்டி ஆசிரியர்கள் திருமிகு.க.முத்துக்கண்ணன், திருமிகு.பி.பாஸ்கர் மாநாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். திருமிகு.வி.வெங்கட்ராமன் மற்றும் ராஜசேகர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். திருமிகு.ரேணுகா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment