முதல் பக்கம்

Dec 9, 2010

NCSC மாநில மாநாட்டில் பங்கேற்பு

கோவை மாவட்டம் கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 3,4,5 தேதிகளில் மாநில அளவிலான 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் தேனி மாவட்ட மாநாட்டில் தேர்வுசெய்யப்பட்ட  ஆண்டிபட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேனி மேரிமாதா மற்றும் கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் கோம்பை எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி மற்றும் கூடலூர் விக்ரம்சாராபாய் துளிர் இல்லத்தைச் சேர்ந்த ஆறு ஆய்வுக்குழுக்கள் [28 குழந்தைகள், 8ஆசிரியர்கள்] கலந்துகொண்டன.
 
நமது மாவட்டச்செயலாளர் திருமிகு.தே.சுந்தர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு.க.முத்துக்கண்ணன் திருமிகு.பி.பாஸ்கர் ஆகியோர் கருத்தாளர்களாகக் கலந்து கொண்டனர். நமது மாவட்டத்திலிருந்து கோம்பை எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானி விருதிற்குத் தேர்வுசெய்யப்பட்டனர். தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27 முதல் 31 வரை சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல்கலாம் நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

No comments:

Post a Comment