முதல் பக்கம்

Sep 11, 2012

சர்வதேச எழுத்தறிவு தினம் - 2012

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் மதுரை மேற்கு ஒன்றியம் பிள்ளையார்நத்தம் ஆகிய இடங்களில் அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச எழுத்தறி தினம் நடத்தப்பட்டது. கருத்தரங்கம், மாணவர்களுக்கான போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன.

திருமங்கலத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கா,காமேஷ் தலைமை வகிக்க. குருசாமி - ஞானவள்ளி அறக்கட்டளை நிறுவனர் குருசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். எழுத்தறிவு குறித்து பி.கே.என். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சு.சங்கரன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்/ கலைஞர்கள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினரும். கவிஞருமான ஆர்,காசிபாண்டியன் ஆகியோர் கருத்துரையாற்றினர். முன்னதாக தீபம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கோமதி வரவேற்புரையாற்ற, தீபம் மாவட்டப் பொருளர் முத்துலட்சுமி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 50 மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
பொதும்பு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு கிளைத் தலைவர் ஹரிபாபு தலைமை வகித்து சிறப்புரையாற்ற.பரவை சத்தியமூர்த்தி நகர் உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் மஞ்சுளா சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு பேச்சுப்போட்டி. ஓவியப்போட்டி. கட்டுரைப்போட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிளைச் செயலாளர் ஜோதிமுருகன் சிறப்பாக செய்திருந்தார். 25 க்கும் மேற்பட்ட துளிர் இல்ல மாணவர்கள். பெற்றோர்கள் என கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment