முதல் பக்கம்

Sep 29, 2012

முப்பருவமுறை-தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை: விவாதம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழுவின் சார்பில் செப்டம்பர்,27 அன்று மாலை 5 மணிக்கு கம்பம் அக்குபங்சர் அகாடமி மையத்தில் தமிழகத்தில் நடைமுறையிலுள்ள முப்பருவமுறை-தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை குறித்து விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப்பொருளாளர் செ.சிவாஜி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் வரவேற்றுப் பேசினார். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் ஜெயமுருகன் விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச் செயலாளர் த.முருகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்டச்செயலாளரும் பல்கலைக்கழக பாடத்திட்டக்குழு உறுப்பினருமான கவிஞர்.அ.உமர்பாரூக், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் மா.ராஜேஷ், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முன்னாள் மேற்பார்வையாளர் ஆர்.இளங்கோவன், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் எஸ்.சேசுராஜ் மற்றும் அறிவியல் இயக்க நண்பர்கள் நந்தகுமார், முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் நன்றி கூறினார். கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன், கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment