முதல் பக்கம்

Jun 9, 2011

தொலைத்தொடர்பு சாதனங்கள் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம்

தினகரன்
கம்பம்,நாள்:மே 20



கம்பத்தில் தொலைத்தொடர்பு சாதனங்கள் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. உலக தொலைத்தொடர்பு தினமாக மே 17ம் தேதிஅனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகளுக்கு தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி பற்றி சிறப்பு பயிற்சி முகாம் கம்பத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை காமராஜர் பல்கலைகழகப்பேராசிரியர் கண்ணன் துவக்கிவைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர் பயிற்சி நோக்கம் குறித்து பேசினார். பிஎஸ்என்எல் அலுவலகப் பொறுப்பாளர்கள் ஸ்ரீராமன்,சீனிவாசன் ஆகியோர் ஆரம்பகால தொலை தொடர்பு சாதனமான தந்திக்கருவி முதல் இன்றைய மக்கள் பயன்படுத்தும் செயற்கைக்கோள் தொலைபேசி வரை பல்வேறு மாதிரிகளை குழந்தைகளிடத்தில் காண்பித்து விளக்கி பேசினர்.

சரவணன்,கணேசன் ஆகியோர் முதல் அலைக்கற்றை முதல் நான்காம் அலைக்கற்றை வரையிலான செல்போன் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி பேசினர். அறிவியல் இயக்க கருத்தாளர் ஓவியா அனலாக் கம்ப்யூட்டர் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் வகைகள் பற்றி படவிளக்கத்துடன் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் நன்றி கூறினார். கூடலூர்,கம்பம்,கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமய கவுண்டன் பட்டி,புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 10 பள்ளிகளைச்சேர்ந்த 25 குழந்தைகள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment