முதல் பக்கம்

Jun 8, 2011

அறிவியல் மாநாட்டிற்கு 26 தமிழக ஆய்வு கட்டுரைகள்

அறிவியல் மாநாட்டிற்கு 26 தமிழக ஆய்வு கட்டுரைகள்

-20-08-2009



கம்பம்: ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் அக்டோபரில் நடைபெறவுள்ள தேசிய அறிவியல் ஆசிரியர் மாநாட்டில் சமர்பிக்க தமிழகத்திலிருந்து 26 ஆசிரியர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேசிய அறிவியல் ஆசிரியர் மாநாடு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கு ‘புவிக்கோளத்தை புரிந்து கொள்வோம்’ என்ற தலைப்பில் ஆசிரியர்களிடமிருந்து ஆய்வு கட்டுரைகள் இந்தியா முழுவதும் இருந்து வரவேற்கப்பட்டது. ஜூலை 25 வரை பீகார் மாநிலம் பாட்னா பல்கலை., பேராசிரியர் வர்மாவிற்கு, ஆய்வு கட்டுரைகள் அனுப்பி வைக்க ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளில், ஒரிசாவில் இருந்து 56, மகாராஷ்ரா, குஜராத் தலா 27, தமிழ்நாடு, ராஜஸ்தான் தலா 26, மத்தியபிரதேசம் 25, <<<உத்தரபிரதேசம் 22, ஆந்திரா 20, புதுச்சேரி 15, கேரளா 14,அசாம் 11, டில்லி எட்டு, பஞ்சாப், அரியானா தலா ஆறு , சட்டீஷ்கர் ஐந்து, மேற்குவங்கம் நான்கு , கர்நாடகா மூன்று, கோவா, காஷ்மீர் தலா இரண்டு, அருணாச்சல், இமாச்சல்,ஜார்கண்ட், மணிப்பூர், மேகலாயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் சுகாஷினியின் ‘தேனி மாவட்டத்தில் பூச்சிகொல்லி மருந்துகளின் பயன்பாடு’ என்ற கட்டுரையும், ராமநாதபுரம் ஆசிரியர் இருளாண்டியின் ‘பூமியும் அதற்கப்பாலும்’, வத்தலக்குண்டு ஆசிரியர் மகமுதா வின் ‘புவிக்கோளமும், பூமியும்’, மதுரை ஆசிரியர் ஞானசேகரனின் ‘பூகம்பத்திற்கு எங்கிருந்து ஆற்றல்’ என்ற கட்டுரை உள்ளிட்ட 26 ஆசிரியர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டுரைகள், புவனேஸ்வரில் வரும் அக்டோபர் ஒன்று முதல் நான்கு வரை நடைபெறும், இந்திய அளவிலான ஆசிரியர் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதிலிருந்து இந்திய அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களை மாநாட்டில் பங்கேற்க அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment