முதல் பக்கம்

Jun 9, 2011

ஆசிரியர் அறிவியல் மாநாடு: புவனேஸ்வரில் நடக்கிறது


ஜூன் 07,2009,00:00  IST
கம்பம்: "புவிக்கோளத்தை புரிந்து கொள்வோம்' என்ற தலைப்பில் ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் இயக்கம் சார்பில் புவனேஸ்வரில் நடக்கிறது. ஆசிரியர்கள் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தகவல் தொழில்நுட்ப குழு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகியவை இணைந்து தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டை 2003 முதல் நடத்தி வருகிறது. அறிவியல் கல்வி குறித்து விவாதிக்கவும், எளிய அறிவியல் கருவிகளை கண்டறியும் ஆர்வத்தை தூண்டவும் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு இந்த ஆண்டிற்கான தலைப்பு "புவிக் கோளத்தை புரிந்து கொள்வோம்' என அறிவிக்கப்பட் டுள்ளது. "கற்றல், கற்பித்தலில் புதுமை', தேசிய கலைத்திட்டம் தொடர்பானவை, "மனிதனின் கண்டுபிடிப்புகளின் விளைவுகள்', "தன்னிறைவுடன் கூடிய வளர்ச்சி' ஆகியவை உப தலைப்புகளாக அறிவிக்கப்ப ட்டுள்ளது. ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அறிவியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கலாம்.

பங்கேற்பவர்கள் தங்கள் சொந்த ஆய்வை ஜூன் 30 க்குள் தபாலில் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகளுக்குரியவர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க முடியும். இந்த ஆண்டிற்கான தேசிய அறிவியல் மாநாடு அக்., 1 முதல் 4 வரை ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தரை  (மொபைல் 94880 11128) தொடர்பு கொள்ளலாம். ஆய்வுகளை பேரா.வர்மா, தேசிய ஒருங்கிணைப்பாளர், என்.டி.எஸ்.சி.2009, சயின்ஸ் பார் சொசைட்டி, நியூ பிளாக், கெமிஸ்ட்ரி டிபாட், சயின்ஸ் காலேஜ், பாட்னா பல்கலைக்கழகம், பாட்னா - 800 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment