முதல் பக்கம்

Jun 9, 2011

ஆசிரியர் அறிவியல் மாநாட்டில் மதுரை ஆசிரியரின் கட்டுரை தேர்வு



அக்டோபர் 07,2009,00:00  IST
General India news in detail
கம்பம்: தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டில், மதுரையைச் சேர்ந்த ஆசிரியரின் ஆய்வு கட்டுரை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு குஜராத் மாநிலம், புவனேஸ்வரில் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து 600 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள், ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்பட்டன.

 300 ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். 30 கட்டுரைகள் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில் இருந்து 30 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. 26 ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். அதில் மதுரை மாவட்டம், பாப்புநாயக்கன்பட்டி கந்தசாமி வித்யாலயா பள்ளியின் ஆசிரியர் இளமாறன் சமர்ப்பித்திருந்த "விளிம்பு விளைவு தத்துவத்தை' மாணவர்களுக்கு கற்பிக்க உதவும் எளிய அறிவியல் கருவி என்னும் கட்டுரை, சிறந்த ஆய்வு கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டது.

கற்றல் கற்பித்தலில் புதுமை என்ற துணை தலைப்பில் இந்த தேர்வு நடைபெற்றது. தேனி மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் சுந்தர் கூறுகையில்; "ஆசிரியர்களிடம் புதுமையான கற்பிக்கும் முறைகளை கண்டறிய இது தூண்டுகோளாக அமையும். தேர்வு செய்யப்பட்டுள்ள ஆய்வு கட்டுரையை எழுதிய ஆசிரியருக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்படும். அடுத்த தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு புதுச்சேரியில் நடைபெறவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment