முதல் பக்கம்

Jun 8, 2011

ஆய்வுக் கட்டுரை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு



First Published : 11 Jun 2009 10:58:02 


 கம்பம், ஜூன் 10: தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டுக்கு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.  அறிவியல் கல்வி குறித்து விவாதிக்கவும், எளிய அறிவியல் கருவிகளைக் கண்டறியும் ஆர்வத்தைத் தூண்டவும், தன்னிறைவுடன் கூடிய வளர்ச்சிக்கு தகுந்த செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசிய தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றக் குழு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், மனித வள மேம்பாட்டுத் துறை இணைந்து நடத்தும் தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு 2003 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டுக்கான பொது தலைப்பாக "புவிக்கோளத்தை புரிந்துகொள்வோம்' என்ற தலைப்பு அறிவிக்கப் பட்டுள்ளது.  அத்தோடு கற்றல் கற்பித்தலில் புதுமை, தேசிய கலைத் திட்டம் தொடர்பானவை, மனிதனின் கண்டுபிடிப்புகளின் விளைவுகள், தன்னிறைவுடன் கூடிய வளர்ச்சி ஆகியவற்றை துணைத் தலைப்பாக அறிவித்துள்ளனர்.  இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஆய்வை ஜூன் 30-க்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் ஆய்வுகளுக்குரிய ஆசிரியர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க முடியும்.  இதற்கான பயணச் செலவு, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அணைத்து வசதிகளும் செய்து தரப்படும்.  ஆய்வுக் கட்டுரைகளை பள்ளி ஆசிரியர்கள் மட்டும் இல்லாமல் ஆசிரியர் பயிற்றுநர்கள், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவியல் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம்.  இந்த ஆண்டுக்கான தேசிய மாநாடு வரும் அக்டோபர் 1 முதல் 4 வரை புவனேஸ்வரில் நடைபெறுகிறது.  சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்கும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் விருதும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.  இதுதொடர்பான விவரங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்க தேனி மாவட்டச் செயலாளரும், சுருளிப்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளி ஆசிரியருமான சுந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment