முதல் பக்கம்

May 8, 2013

துளிர் இல்லக் குழந்தைகள் 2ஆவது மாநில மாநாடு பங்கேற்பு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கும் துளிர் இல்லக் குழந்தைகளின் 2வது மாநில மாநாடு மே,4,5.2013 தேதிகளில் நெல்லை ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் துவக்கி வைத்துப் பேசினார். துளிர் இல்ல மாநில ஒருங்கிணைப்பாளர் .அமலராஜன் அறிக்கை சமர்ப்பித்தார்.


முதல் நாள் காகிதத்தில் கணிதம், கற்பனையும் கைத்திறனும், பொம்மலாட்டக் கருவிகள் செய்தல், மரம் ஓர் ஆய்வு எனப் பல்வேறு தலைப்புகளில் இணை அமர்வுகள் நடைபெற்றன. இரண்டாவது நாள் குழந்தைகளும் சுகாதாரமும் குழந்தைகளும் புத்தகங்களும், சுற்றுச்ச்சூழல், குழந்தைகளும் அறிவியல் பரப்புதலும் ஆகிய தலைப்புகளில் இணை அமர்வுகள் நடைபெற்றன. விஞ்ஞான் பிரச்சார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், புதுதில்லி மற்றும் முனைவர்.எஸ்.தினகரன் உள்ளிட்ட பல கருத்தாளர்கள் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்டப் பங்களிப்பு:

தேனி மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் கற்பனையும் கைத்திறனும் என்ற அமர்விற்கும் கம்பம் கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் குழந்தைகளும் புத்தகங்களும் என்ற அமர்விற்கும் கருத்தாளர்களாகச் செயல்பட்டனர். துளிர் இல்ல மாணவர்கள் சுரேந்தர், சுபாஷ் ஆகியோர் தொண்டர்களாகச் சிறப்பாகச் செயல்பட்டனர்.

No comments:

Post a Comment