முதல் பக்கம்

May 23, 2013

அரசு பள்ளிகளில் சேர பிரசாரம்

கம்பம்
First Published : 20 May 2013 12:11 AM

கம்பம் வட்டாரப் பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கல்வி உப குழு ஒருங்கிணைப்பாளர் வி. வெங்கட்ராமன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் துண்டு பிரசுரத்தை கிளைச் செயலாளர் க.முத்துகண்ணன் வெளியிட, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சின்னபாண்டியன் பெற்றுக்கொண்டார்.

மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கக் கோரி பொதுமக்களிடம் ஆசிரியர்கள் ராஜ்குமார் மற்றும் துளிர் மாணவர்கள் பிரசுரத்தை வழங்கினர். சுருளிப்பட்டி அரசு கள்ளர் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மேகலா தலைமை வகித்தார். கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் ஆசிரியர்கள் சென்று பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனர். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்கள் குறித்தும் எடுத்து கூறினர்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment