முதல் பக்கம்

May 26, 2013

குழந்தைகளுக்கான மாநில மாநாடு

 First Published : 07 May 2013 05:28 AM IST

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் இல்லக் குழந்தைகளுக்கான மாநில மாநாடு திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

சீதபற்பநல்லூரில் உள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இம் மாநாட்டிற்கு துளிர் இல்லக் குழந்தை கே. முத்து இசக்கியம்மாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ். கணபதி வரவேற்றார். துளிர் இல்ல மாநில செயல்பாட்டின் அறிக்கையை துளிர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ. அமலராஜன் விளக்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க பொதுச்செயலர் எம்.எஸ். ஸ்டீபன் நாதன் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார்.

ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரிச் செயலர் ஆ. மதிவாணன், கல்லூரி முதல்வர் கே. ராமர், அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மாநில செயலர் மு. தியாகராஜன், மாவட்ட துணைத் தலைவர் எஸ். சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

தில்லி விஞ்ஞான பிரசார பதிவாளர் டி.வி. வெங்கடேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.

பொம்மலாட்ட பொம்மைகள் தயாரித்தல், கற்பனையும் கைத்திறனும் வளர்க்கும் கலை, கணிதத்தில் காகிதம், மரம் பற்றிய ஆய்வு, நாடகப்பயிற்சி, கதை உருவாக்குதல், ஓவியம் வரைதல், கேள்விகள் தயாரித்தல் போன்ற செயல்பாடுகள் நடைபெற்றன.

இம் மாநாட்டில் 19 மாவட்டங்களில் இருந்து 171 குழந்தைகளும், 67 பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். பேராசிரியர் குமரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலர் சி. பால்ராஜ், மாவட்ட துளிர் ஒருங்கிணைப்பாளர் ஏ. கணேசன் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
 
நன்றி: தினமணி
திருநெல்வேலி

No comments:

Post a Comment