முதல் பக்கம்

Oct 27, 2011

மாநில அளவிலான துளிர்/ஜந்தர்மந்தர் அறிவியல் வினாடி-வினா-2011


அன்புடையீர், வணக்கம். கடந்த செப்டம்பர் 7,2011 அன்று கம்பம் ஸ்ரீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன. தங்கள் பள்ளியில் இருந்தும் மாணவர்களைக் கலந்து கொள்ளச்செய்தமைக்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, தேனி மேலப்பேட்டை இந்துநாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.கே.பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர். .அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வருகின்ற அக்டோபர் 30ம்தேதி மாநில அளவிலான வினாடி-வினா போட்டிகள் கரூரில் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப்பெற்ற மாணவர்கள் கலந்துகொள்ளலாம். தமிழ்வழி பயிலும் மாணவர்கள் துளிர் பிரிவிலும் மெட்ரிக் மாணவர்கள் ஜந்தர்மந்தர் பிரிவிலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நடைபெறும் இடம் & இதர தகவல்கள்:

1. பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி, பரணி பார்க் வளாகம்,கரூர்.
2. இயற்பியல், வேதியியல், உயிரியல், துளிர், பொது அறிவு, காட்சிப்படுத்துதல், கணிதம், புதிர், சோதனை செய்முறை, இயற்கை கண்டறிதல், தொட்டுணர்ந்து தெரிவித்தல் போன்ற சுற்றுக்களில் கேள்விகள் இடம்பெறும்.
3. காலை 8.30 மணி முதல் பதிவு நடைபெறும்
4. கலந்துகொள்ளும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5. அனைவரும் குளிப்பதற்கான வசதிகள் உண்டு.
6. இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்வதற்கு அறிவியல் இயக்கம் சார்பில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் வருகை தரவும்.
7. பள்ளியில் இருந்து கடிதம் அவசியம் பெற்று வரவும்.
8. உங்களின் பயணத்திட்டம்,பங்கேற்பு குறித்து மாவட்டச் செயலாளருக்கு மறவாது தெரியப்படுத்தவும்.

தங்கள் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலும் வெற்றிபெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்.

No comments:

Post a Comment