முதல் பக்கம்

Dec 2, 2011

துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகள்-2011

வணக்கம்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, இளைஞர் அறிவியல் மாநாடு, துளிர் அறிவியல் திருவிழா, துளிர் அறிவியல் வினாடிவினா போன்ற பல்வேறு பணிகளைச் செய்துவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த பத்து ஆண்டுகளாக துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகளை நடத்தி வருகின்றது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத்திறனறிதல் போட்டிகள் நடத்தப்படுகின்றது.

இவ்வாண்டிற்கான போட்டிகள் டிசம்பர்,2,2011 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபிக் உயர்நிலைப்பள்ளி, கூடலூர் என்.எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி, காமயகவுண்டன்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கருநாக்கமுத்தன்பட்டி சி.வி.ராமன் துளிர் இல்லம், இராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் முகமது பாத்துமா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சின்னமனூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொண்டுராஜா நினைவு உயர்நிலைப்பள்ளி, நாகலாபுரம் பாலவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம் அரசு நடுநிலைப்பள்ளி, பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளி, ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்றது. திறனறிதல் போட்டியில் சுமார் 30 பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.

அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் திருமிகு.மா.சிவக்குமார், பேரா.சிவரெங்கநாதன், தொண்டர்கள் சி.ஈஸ்வரன் ஆர்.ராஜ்குமார், பெ.ஆண்டவர், எம்.மைதீன், தங்கராஜ், ஆர்.அம்மையப்பன், சுரேஷ், ஈ.ஜெகதீசன் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டனர்.  திறனறிதல் போட்டி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர்  பா.செந்தில்குமரன், மாவட்ட செயலாளர் தே.சுந்தர், கிளைச்செயலாளர்கள்  மு.தெய்வேந்திரன், எஸ்.ராம்சங்கர், வி.வெங்கட்ராமன், க.முத்துக்கண்ணன்  ஆகியோர் செய்திருந்தனர்.

* 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.
*6-8 இளநிலை எனவும், 9-12 முதுநிலை எனவும் இருபிரிவுகளில் தேர்வு நடைபெற்றது.
*தேர்வில் மாணவர்கள் 120 நிமிடத்தில் 100 வினாக்களுக்குப் பதிலளிக்க
வேண்டும். வினாக்கள் பொது அறிவியலாகவும் அறிவியல் விழிப்புணர்வுத்
தகவல்களாகவும் துளிர் அறிவியல் செய்திகளாகவும் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வுத் திறனை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும்.
*வினாக்களுக்கு பதில்களை 4 விடைகளிலிருந்து 1 விடையைத்தேர்வு
செய்யும் வகையிலும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிற்கான
போட்டித் தேர்வுகளில் பங்கேற்கப் பயிற்சி அளிக்கும் வகையிலும் இருக்கும்.
*பெரும்பாலான வினாக்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் காரணகாரிய அறிவையும் அறிவியல் குறித்த புரிதலையும் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
*வினாக்கள் ஆங்கிலம்,தமிழ் ஆகிய இருமொழிகளிலும் இருக்கும்.
*எழுத்துத்தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான
பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.
*தேர்வில் மாநில அளவில் முதல் பத்து இடங்கள் பெறும் மாணவர்கள் அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கும் வாய்ப்பும் சிறப்புப்பரிசும் வழங்கப்படும்.
*அதிக மாணவர்கள் கலந்துகொண்ட பள்ளிகளுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.
*திறனறிதல் தேர்வு மதிப்பீடு முனைவர்.அ.வள்ளிநாயகம் அவர்களது தலைமையில் தஞ்சையில் நடைபெறும்.

No comments:

Post a Comment