முதல் பக்கம்

Jan 26, 2012

திறனறிதல் தேர்வில் வெற்றிபெற்றோர் விபரம்

துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகள்-2011

வணக்கம். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, இளைஞர் அறிவியல் மாநாடு, துளிர் அறிவியல் திருவிழா, துளிர் அறிவியல் வினாடிவினா போன்ற பல்வேறு பணிகளைச் செய்துவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த பத்து ஆண்டுகளாக துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகளை நடத்தி வருகின்றது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத்திறனறிதல் போட்டிகள் நடத்தப்படுகின்றது.
 
தேர்வு மையங்கள்:
இவ்வாண்டிற்கான போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னால் கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபிக் உயர்நிலைப்பள்ளி, கூடலூர் என்.எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி, காமயகவுண்டன்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,கருநாக்கமுத்தன்பட்டி சி.வி.ராமன் துளிர் இல்லம், இராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் முகமது பாத்துமா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சின்னமனூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொண்டுராஜா நினைவு உயர்நிலைப்பள்ளி, நாகலாபுரம் பாலவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம் அரசு நடுநிலைப்பள்ளி, பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளி, ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்றது. திறனறிதல் போட்டியில் சுமார் 30 பள்ளிகளில் இருந்து 850க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.

அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் மா.சிவக்குமார், பேரா.சிவரெங்கநாதன், தொண்டர்கள் சி.ஈஸ்வரன் ஆர்.ராஜ்குமார், பெ.ஆண்டவர், எம்.மைதீன், தங்கராஜ், சுரேஷ், ஈ.ஜெகதீசன் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டனர்.  திறனறிதல் போட்டி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர்  பா.செந்தில்குமரன், மாவட்ட செயலாளர் தே.சுந்தர், கிளைச்செயலாளர்கள்  ஆர்.அம்மையப்பன், மு.தெய்வேந்திரன், எஸ்.ராம்சங்கர், வி.வெங்கட்ராமன், க.முத்துக்கண்ணன்  ஆகியோர் செய்திருந்தனர்.

விதிமுறைகள்:
v  6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.
v  6-8 இளநிலை எனவும், 9-12 முதுநிலை எனவும் இருபிரிவுகளில் தேர்வு நடைபெற்றது.
v  தேர்வில் மாணவர்கள் 120 நிமிடத்தில் 100 வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டும். வினாக்கள் பொது அறிவியலாகவும் அறிவியல் விழிப்புணர்வுத் தகவல்களாகவும் துளிர் அறிவியல் செய்திகளாகவும் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வுத் திறனை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும்.
v  வினாக்களுக்கு பதில்களை 4 விடைகளிலிருந்து 1 விடையைத்தேர்வு செய்யும் வகையிலும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கப் பயிற்சி அளிக்கும் வகையிலும் இருக்கும்.
v  பெரும்பாலான வினாக்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் காரணகாரிய அறிவையும் அறிவியல் குறித்த புரிதலையும் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
v  வினாக்கள் ஆங்கிலம்,தமிழ் ஆகிய இருமொழிகளிலும் இருக்கும்.

தேர்வு முடிவுகள்:
திறனறிதல் தேர்வுக்கான மாநில அளவிலான  மதிப்பீடு முனைவர்.அ.வள்ளிநாயகம் அவர்களது தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. முதுநிலைப் பிரிவில் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் ஜி.மகாலட்சுமி முதல் இட்த்தையும் எஸ்.சங்கீதா இரண்டாவது இடத்தையும் தேனி, மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எஸ்.பிரசன்னா, ஆர்.கோகுல் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இளநிலைப் பிரிவில் இராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எ.ரோஷன் சர்மிளா முதல் இடத்தையும் தேனி-நாகலாபுரம் பாலவித்யாமந்திர் மெட்ரிக்பள்ளி மாணவி ஐ.ஸ்ரீநிதி இரண்டாம் இடத்தையும் தேனி, மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.சத்யசெல்வன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும். முதல் இரண்டு இடம்பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவில் நடைபெறும் அறிவியல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்.
அன்புடன்..
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

No comments:

Post a Comment