முதல் பக்கம்

Aug 8, 2011

ஹிரோஷிமா தின கருத்தரங்கு,ஆண்டிபட்டி கிளை

ஆகஸ்ட் 5,2011 அன்று காலை 11.30 மணிக்கு
ஆண்டிபட்டி வட்டாரக் கிளையின் சார்பாக
ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
ஆதிக்கப்போரால் அதிர்ந்த உலகம் என்ற
தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு
உறுப்பினர் திருமிகு.மு.தியாகராஜன்
கருத்துரை வழங்கினார்.
மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர்
வெங்கட்ராமன் எளிய அறிவியல்
பரிசோதனைகள்
செய்து காட்டி பின்னர் விழுது இதழை
அறிமுகப்படுத்திப் பேசினார்.
பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர்,
ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கிளைச்செயலாளர் ஆர்.அம்மையப்பன்
துணைச்செயலாளர் ஜான்சன் ஒருங்கிணைத்தனர்.
சுமார் 400 மாணவியர் கலந்து கொண்டனர்.
பிற்பகலில் மேலப்பேட்டை இந்துநாடார்
உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்
அதே கருத்தரங்கம் நடைபெற்றது.
300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment