முதல் பக்கம்

Sep 8, 2011

உலக புத்தக தினம்... ஏப்ரல்23...!



*உலக புத்தக தினம்*
 புத்தகம் பேசுது, புத்தகம் பேசுது, புத்தகம் பேசுது..
 உலகை, மனிதரை,
 இன்பத்தை, துன்பத்தை
அழகியமலரை, அணுகுண்டை,
வெற்றியை, தோல்வியை
தேசத்தை, நாசத்தை..
புத்தகம் பேசுது,புத்தகம் பேசுது,
புத்தகம் பேசுது....! ..
(அறிவியல் இயக்க பாடல் )

                     

 காலம் நம் கையில்தானே..
எதிர்காலம் நம்கையில்தானே..! ......
சின்னஞ் சிறிய கருந் தீவில் - நாம்
தன்னந் தனியே இருந்தாலும் - ஒரு
 புத்தகம் நம் கையில் கிடைத்தால் - நம்
 தனிமையும் தவிப்பும் தானாக விலகும்
 காலம் நம் கையில் தானே...!....
(அறிவொளி பாடல்)


 * உலக புத்தகதினமும்... காப்புரிமை தினமும்...!*

   நாம் காலம் காலமாக புத்தகம் படிக்கிறோம்..! புத்தகம் எழுதப் படுகிறது..!
புத்தகங்களை சேமிக்கும் இடத்தை நூலகம் என்கிறோம். ஆனாலும் கூட, புத்தக படிப்பை
ஊக்குவிக்க, ஓர் தூண்டுதல் தேவையாயிருக்கிறது. அதற்காக, யுனெஸ்கோ என்ற உலக
கல்வி நிறுவன அமைப்பு மக்களிடையெ புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை
ஊக்குவிக்கவும், அதற்காக அதிக புத்தகங்களை வெளியிவும் முடிவு செய்தது.  அதன்
அடிப்படையில் தொடர்ந்து   உலகம் முழுவதும் 1995 முதல் ஏப்ரல் 23 உலக புத்தக
தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக வந்ததிரு ஒரு காரணம்
உண்டு. உலகம் முழுவதும் இந்த நாளில் புத்தகத்தையும், அதை உருவாக்கியவர்களையும்
மரியாதை செய்கின்றனர். உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில்
பிறந்தோ/மறைந்தோ இருக்கின்றனர்.**
**
முக்கியமாக,  ஐரோ ப்பாவில் வாழ்ந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர்,  உலக
மக்கள் வியக்கும் ரசிக்கும் உலகின் தலை சிறந்த சோக காவியம் லியா அரசன்,  காதல்
காவியம் ரோமியோ ஜுலியட்' ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும்,
மச் அடோ அபவுட் நத்திங்   (Much Ado About Nothing)  என்ற நகைச்சுவை
நாடகத்தையும் எழுதினார். இவர் பிறந்ததும், உலகைவிட்டு மறைந்ததும்..ஏப்ரல்  23
ல் தான்.அது போலவே, 1923 , ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 23 ம நாள் இறந்த, பிகுல்டி
செர்வேண்டிசின் நினைவாகவும் புத்தக தினம் கொண்டாடு வதாக சொல்லப் படுகிறது.

   **
**
*வில்லியம் ஷேக்ஸ்பியர்*

**
**
*ஜான் மில்டன்*

**
**
*ஷேக்ஸ்பியரின் சிலை*

*வாழ்க்கைப் போராட்டத்தில்.. வென்ற இலக்கியவாதிகள்..!*

* *   வில்லியம் ஷேக்ஸ்பியரும், ஜான் மில்டனும் ஆங்கில இலக்கியத்தின் இரு
கண்களாகப் போற்றப் படுகின்றனர். ஆனால், இவர்களின் இளமைக்காலத்தைப் புரட்டிப்
பார்த்தால், கதை வேறு மாதிரி இருக்கிறது.  கல்விக் கூடத்தில் சரியாகப் போதனை
பெற முடியாமல், சமூக நீதிகளும், சமூக காரணங்களும், இவர்கள் இருவரையும்,ஓட
ஓட விரட்டி விட்டன. "கல்வி அனைவருக்குமானது;புத்தகம்  பொதுவானது " என துண்டு
பிரசுரம் கொடுத்ததிற்காக , மில்டன் சிறைச்சாலையை சந்திக்க நேரிட்டது. அவருக்கு
இந்த வெளி உலகை காண முடியவில்லை. அக உலகின் கண்கள் மட்டுமே அவருக்கு
திறந்திருந்தன.இந்த நிலையிலும்,கல்வி மேல், மீளாக் காதல் கொண்டவர் மில்டன்.
எனவே, சிறைக் கம்பிகளுக்கிடைஎயும், மற்றவர் வாசிக்க கேட்டு, மேதையானார். உலகப்
புகழ் பெற்ற கவிதையான, "பாரடைஸ் லாஸ்ட் (Paradise lost) என்ற அழியா நூலை
உருவாக்கினார். இது போலவேதான், வில்லியம் ஷேக்ஸ்பியரும் அரச மொழி என்று
போற்றப்பட்ட லத்தினை எதிர்த்து, தனது தாய் மொழியான ஆங்கிலத்தை இலக்கியத்தில்
நுழைப்பதற்காகவே, பல காவியங்கள் புனைந்தவர். வாசிப்பின் லயிப்பில் மனம்
ஈடுபட்டு , தூக்கத்தைத் துறந்தவர்..!

**
**
*இஷாங்கோ எலும்பு*
* *

* *
**
*குரோமேக்னன் மனிதனின் பதிவு*
*முதல் புத்தகம்..குகையும்..எலும்புகளும்..!*

*  *  இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைத்தளமும், தொலைபேசி, கைபேசிகளும்,
மின்னஞ்சலும், முக்கியமாக தொலைக் கட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும்
பழக்கத்தை பிடுங்கிவிட்டன..! ஆனால் புத்தகம்தான், நிரந்தரமாய் நிலைத்து
..சுவையும், இன்பமும், ரசனையும தரவல்லது.  படிப்பதன் ஆழ்ந்த அருமையான சுவை
என்பது, வலைத் தளத்தில்நிச்சயமாக  கிடைக்காது. ! புத்தகம் என்பது ஒருவரின்
சொத்து..! எழுத்துக்களின் முதல் பதிவு..! குகைச் சுவர்களிலும், இஷாங்கோ
(Ishango) எலும்புகளிலும் , சுமார் 37,000    ஆண்டுகளுக்கு முன்பே, இவை
நிகழ்ந்து விட்டன.  பின்னர் களிமண் கலவைகளிலும், பாப்பிரஸ் மரப்பட்டைகளிலும்
எழுதப் பட்டன. அவை அனைத்துமே புத்தகங்கள்தான்..! வரலாற்றுப் பதிவுகள்தான்..!

    **
**
*புத்தகமும் ரோஜாவும் பரிசாக*

*எழுத்தாளர் தினம்...புத்தக தினம்..! *

*  *
**
*பார்சிலொனாவில் புத்தக தினத்தன்று, புத்தகத்துடன் ரோஜா மலர் கொடுக்கப்
படுகிறது.*

**
**

* *காதலர்கள் தமக்குத் தரும் ரோஜாப் பூக்களுக்குப் பதிலாக, பெண்கள் தங்களின்
காதலர்களுக்கும் புத்தகத்தையே பரிசாகத் தந்தனராம். 1616 ம ஆண்டில், ஏப்ரல் 23 ,
உலக இலக்கிய தினமாக கருதப் பட்டு, ஒவ்வொரு புத்தகம் விற்கும்போதும், அதனுடன்
ஒரு ரோஜாப் பூவினை, காட்டலோனியா என்ற ஊரில்  அன்பளிப்பாகத் தந்தனராம்.அது
போல, 1616,ஏப்ரல் 23 ம்  நாள் உலகின் புகழ் பெற்ற
எழுத்தாளர்களான, ஷேக்ஸ்பியர்,செர்வேண்டிஸ்,இன்கா கார்கிலாசோ ,  (William
Shakespeare, Miguel de Cervantes, Inca Garcilaso de la Vega )    போன்றோர்
இறந்தனர். ஏப்ரல் 23 ம் நாளில்  மாரிஸ் , ஹால்டோர் லேக்சனஸ், விளாதிமிர்
நொபொகோவ், ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியா (Maurice Druon, Haldor
K.Laxness, Vladimir Nabokov, Josep Pla and Manuel Mejía Vallejo) போன்ற
எழுத்தாளர்களும் இந்த உலகத்தைப் பார்வையிடப்  பிறந்தனர். புத்தக தினத்தில்
அனைவரும் புத்தகம் வாங்க வேண்டும் என உறுதி மொழி எடுக்க வேண்டும். : "மனிதனின்
கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே..! " என , 20௦ ம்  நூற்றாண்டின்
சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

 கூறியுள்ளார்.

 *  நாகரிக ..வரலாறு..!*

   **
**
உலகின் உருவாக்க வரலாறு சுமார், 450 கோடி, ஆண்டுகளுக்கு முற்பட்டது. உயிரினம்
350 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது. மனித இனத்தின் சரித்திரம் மற்றும்
பரிணாமத்தின் வயது 50 இலட்சம் ஆண்டுகள்..! நாம் பல நிலைகளைக் கடந்துதான் இன்று
"வெள்ளையும் சொள்ளையுமாக" நாகரீக மனிதர்களாய் பரிணமித்துள்ளோம் .ஆதி மனிதன்
காடுகளிலும் மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்திருக்கிறான். சக்கரம் சுழலத்
துவங்கிய பின்னர்தான், மனித தொழில் நுட்பத்தின் பரிணாமத்தின் முதல் அத்தியாயம்
துவங்கியது. ..! ஆனால் அதற்கு முன்பே, மனிதன் தன கருத்துகளை, எண்ணங்களை பதிவு
செய்யத் துவங்கிவிட்டான்.பலப் பல வகைகளில்...! எத்தனை ஆண்டுகளுக்கு முன்
இருக்கலாம் என எண்ணுகிறீர்களா..? அண்ணாச்சி சுமார் 40 ,000 ஆண்டுகளுக்கு
முன்னால்தான்..!   .

   **
**


 *முதல்..பதிவு..! *

   நண்பா..! குகைகளில் எழுதத் தொடங்கு முன்பே, எலும்புகளில் பதிவு
செய்துவிட்டனர். ஆம், இதைச் செய்ததும் ஒரு பெண்ணே என தற்போது தெரிய
வந்துள்ளது.அதுதான் உண்மை..!.. அது பபூன் குரங்கின் கை எலும்பில்தான் அது
நிகழ்ந்தது; பெண்கள் குறியீடாக மாதத்தின் நாட்களை, தனது மாதவிடாயை, வானில்
நிலவு வந்து போகும்  காலக் கெடுவுடன் தொடர்புடையதாக, குறித்து வைத்துள்ளனர்.
"லேபோம்பா" (Lebombaa ) எனற இடத்தில் கிடைத்த எழும்பி,அதன் பெயரிலே  லேபோம்பா
என்றே அழைக்கப்பட்டது. ! அதன் வயது என்ன தெரியுமா? சுமார் 37,௦௦௦000 ஆண்டுகள்.!
இந்த எலும்பில் 29 கோடுகள்/பட்டைகள் உள்ளன. இஷாங்கோ என்ற இடத்தில் கிடைத்த
எலும்பின் பெயர்" இஷாங்கோ எலும்பு". இதன் வயது 20,000  -25,000  ஆண்டுகள்.இதில்
3 வரிசையில் எண்கள் பற்றி "டாலி( Tally )" குறியீட்டில் பதிவு  செய்துள்ளனர்
அக்கால பெண்கள்/மனிதர்கள்..!  இதில் 6 மாத சந்திர காலண்டர்
பொறிக்கப்பட்டுள்ளது. "அண்ணாச்சி, கிராமத்தில் பால், மோர் மற்றும் காய்கறி
விற்கும் பெண்கள் நம் வீட்டின் சுவரில் கரிக் கோடு போடும்
விஷயங்கள்..மண்டைக்குள் ஓடுகின்றதா.?".

   *பயம் ...வந்தது..!*

   **
**
*புத்தகப் புழுவா?*
எலும்பில் எழுதிய மனிதன், மலையின் குகைகளில் எழுதினான். பிறகு பாப்பிரஸ்
மரபட்டைகள், ஆடு மற்றும் கன்றுகுட்டியின் தோள்கள், மரபட்டைகள், களிமண், மண்
ஓடுகள் மற்றும் பேப்பர்கள் என, எழுத்தின் பதிவு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம்
பெற்று, இன்று மின்னஞ்சலில், வலைதளத்தில், e-எழுத்தாக மாறியுள்ளது. இதன் மூலம்
எழுத்துகள் பதித்த புத்தகம் காணாமல் போய்விடுமோ இன்று..  என்ற
அச்சம்,நம்மிடையே  பிறந்துள்ளது..உலகில்..!

   * காலப் பதிவுகள்..மனிதப்..பரிணாமத்தில்...! *

  - * *கி.மு..1,00,000  -40,000 ...பேச்சு பிறந்தது.
  - கி.மு.30,000ஆண்டுகளுக்கு முன்...  
  குகை ஓவியம்/கிறுக்கல்கள்-ஐரோப்பாவில்...

  - கி.மு.. 20,000  -6,500  
விலங்குகளின் எலும்பில்  எழுத்து-- பிரான்சில்

  - கி.மு ..5,500 - 4.,500 
எழுத்துப் பதிவின்  துவக்கம் --ஆப்ரிக்கா

  ஆப்பிரிக்காவில் எழுத்துப் பதிவு
  *
  - கி.மு ..3,500 -3,000 
சுமேரியப் படப் பதிவு * சுமேரிய எழுத்துக்கள்
  *
  - கி.மு ..3,000 - 2,800  
எகிப்தின் களிமண்-பதிவுகள் *
  எகிப்திய பாப்பிரஸ் எகழுத்துக்கள்
  *
  - கி.மு ..2,500                                     உலகில் கிழக்குப்
  பகுதி நோக்கி கியுனிபாரம்  எழுத்துக்கள் பரவுதல் *
  குயூனிபாரம் எழுத்துக்கல்
  *
  - கி.மு ..2,500                                     சிந்துசமவெளி
  நாகரிகம், எழுத்து மற்றும் படப்  பதிவுகள்
  - *
  சிந்துசமவெளி.. மொகஞ்சதாரா
  சிந்து நாகரிக எழுத்துக்கள்
  *
  - கி.மு ..2,100                            களிமண்
  எழுத்துக்கள்-எலும்பு   எழுத்துக்கள் கண்டுபிடிப்பு *
  மண்டையோட்டில் எழுத்துப் பதிவு
  *
  -  கி.மு ..1,500௦௦                                     சீனர்களின்
  குறியீட்டு எழுத்துப் பதிவு *
  பழங்கால சீன எழுத்துக்கள்
  *
  - கி.மு ..1,400                                     உகாரிட் பதிவுகள்
  - கி.மு ..1,100 - 900                             நவீன எழுத்துக்கள் *
  நவீன தமிழ் எழுத்து
  பழங்கால தமிழ் எழுத்து
  - கி.மு ..8,000   கிரேக்க நவீன எழுத்துக்கள்

அலெக்சாண்டிரியா நூலகமும், தாலமியும்*

*  நூலக...பிறப்பு...!*


*அலெக்ஸ்சாண்டிரியா நூலகத்தின் உட்பகுதி*


*அலெக்ஸாண்டிரியா நூலகத்தில். பல மொழிகளின்பதிவு*

*அலெக்சாண்டிரியா நூலகம் உட்பகுதி*

*     * எகிப்தின் அலெக்சாண்டிரியாவில், கி. மு 247ல் உலகின் மிக பெரிய நூலகம்
இருந்ததாம்.  சுமார் 7,00,000க்கும் மேற்பட்ட ஆட்டுத்தோல் புத்தகங்கள் அங்கு
இருந்தனவாம்; 5,000  மாணவர்கள் படித்தனராம்.  நாம் பயன் படுத்தும்
காகிதத்தை சீனர்கள் கண்டு பிடித்தாலும், புத்தகபுரட்சியைப்  செய்தவர்கள்
அரேபியர்கள்தான். முகம்மதியர்களிடமிருந்தே..  பேப்பர் புத்தக பரிமாணம்
துவங்கியது. 8 ம் நூற்றாண்டில், மொராக்கோவில் 100 புத்தக கடைகள் இருந்தனவாம்.
இந்தியாவில் கி.பி, 2 ம் நூற்றாண்டில் ஆந்திராவில் நாகர்ஜுன  அரசன் உருவாக்கிய
நூலகம்"நாகார்ஜுன வித்யா பீடம்". இந்த நூலகத்தில்  பல விலங்குகளின் வடிவில் 5
மாடிகளும், 1500 அறைகளும் இருந்தன.கி.பி  7 ம் நூற்றாண்டில் 68 ,700  பனை ஓலை
நுல்களும், 36,௦058 பாப்பிரஸ் சுருள் புத்தகங்களும் இருந்தன.

 *கருத்துக்களின் ....விதை...நூலகம்..!*


*புத்தகக் குவியல்*

தமிழ் நாட்டு நூலக வரலாற்றில் பிதாமன் இராமாமிர்தம் ரங்கநாதன்  ..!
இவர்தான் "சென்னை மாநிலத்தின் நூலகத் தந்தை" என்று அழைக்கப்பட்டு, மரியாதை
செய்யப் படுபவர்.  1928 ஜனவரியில் சென்னை நூலக சங்கம் ரங்கநாதனால்
உருவாக்கப்பட்டது. 1931 ல், அக்டோபர் 21 ம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு
மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேலவாசலில், நடமாடும் நூலக வண்டிப் பயணம் தொடங்கப்
பட்டது. அங்கு 72 கிராமங்களில், 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்
பட்டது..! இதில் 3,782 புத்தகங்கள், 20,000 தடவைகளுக்கு மேல், மக்களுக்குக்
கொடுத்து, திரும்பப் பெறப்பட்டன. ! ஆனால்   இன்று அரசுப் பள்ளிகளில் கூட நூலகம்
இல்லாத நிலைமை..! மனித நாகரிக வளர்ச்சியின்   பதிவு நூலகமே..!


மனிதன் வரலாற்றுக்குரியவன்  ..! நேற்று, இன்று, நாளை என்ற மூன்றும்
மனிதனுக்குரியவை. சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள், நம்பிக்கைகள்,
சந்தோஷங்கள், சவால்கள், மதிப்பீடுகள், நுணுக்கமான கருத்துக்கள் அனைத்தும்
கல்விப் பொருளாக, புத்தகங்களாக மாற வேண்டும்..! அத்தகைய உள்ளடக்கம் கொண்ட
கல்விதான் மக்களை விடுதலை செய்யும்.

  " மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப் படவில்லை. ! அவன் வார்த்தகளால்,
செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கை களால் கட்டமைக்கப்
படுகின்றான். "--பாவ்லோ பிரையர்

       இந்த வேலையைச் செய்வது புத்தகங்கள் மட்டுமே..!


*Silverwood Primary School P 1 pupils enjoy World Book Day.*

*பள்ளியில் உலக் புத்தக தினம் கொண்டாடும் மலர்கள்*


*தாயிடமிருந்து புத்தகம் பறித்து படிக்கத் துடிக்கும் வாண்டு*
அனைவரும் மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள்..!

  குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் ,மற்றும்  உறவினர்கள் அனைவருக்கும்
இன்று புத்தகங்கள் பரிசளியுங்கள்...! குழந்தைகளுக்கு வாசிக்க கற்றுக்
கொடுங்கள்.!

அயல் நாடுகளில் நூலகத்தில் குழந்தைகள் அமர்ந்து படிக்கவும், புத்தகம்
எடுக்கவும் வசதிகள் உள்ளன. நம் ஊரில் பெரியவர்கள் படிக்கவே நூலகம் ஒவ்வொரு
ஊரிலும் தேவை..@

   உலக நாயகனான சார்லி சாப்ளின், ஒவ்வொரு புதிய படம் நடிக்க
ஒப்புக்கொள்ளும்போதும், அதன் முன் பணத்தில் முதல் 100 டாலருக்கு புத்தகம்
வாங்குவாராம். **
*சார்லி சாப்ளின்*

  "ஒரு புத்தகத்தை திறக்கும்போது, உலகினை நோக்கிய ஒரு சன்னலைத்
திறக்கிறோம்"...தோழர் சிங்காரவேலர்.

*வாசிக்கும் மலர்கள்*
 "வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டுபிடிக்கப்
பட்டது புத்தகம் மட்டுமே"..மார்க் ட்வைன்

*பெர்னார்டு ஷா*
ஒரு நல்ல வாசகனைக் கொண்டே, ஒரு நல்ல புத்தகம் அடையாளம் கட்டப்
படுகிறது"..ஜார்ஜ் பெர்னாட்ஷா

 "ஒருவர் மூளைக்கும் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை  மற்றொரு மூளைக்குள் கொண்டு
செல்லும் தேனீக்கள்தான் புத்தகம்" --ஜேம்ஸ் ரஸ்ஸல்

      *"புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்..!" 

* *

 
_பேரா.சோ.மோகனா

No comments:

Post a Comment